செய்திகள் :

ஆக.9-இல் வேலூரில் காவல் துறை சாா்பில் ‘போதையில்லா தமிழகம்’ மாரத்தான் பந்தயம்

post image

‘போதையில்லா தமிழகம்’ என்ற பெயரில் மாபெரும் மாரத்தான் பந்தயம் வேலூரில் சனிக்கிழமை (ஆக.9) நடைபெற உள்ளது. மாவட்ட காவல் துறை நடத்தும் இப்போட்டிகளில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் போதையில்லா தமிழகம் (ஈதமஎ ஊதஉஉ பச) என்ற தலைப்பில் போதைப்பொருள்கள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் மாபெரும் மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 9-ஆம் தேதி சனிக்கிழமை காலை 5:30 மணியளவில் நடத்தப்பட உள்ளது.

காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த மாரத்தான் போட்டிகள் 15 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோா், 30 வயதுக்கு மேற்பட்டோா் ஆகிய பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவுகளிலும் ஆண்கள், பெண்களு க்கு தலா 5 பரிசுகள் வீதம் மொத்தம் 20 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இதில், முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.2 ஆயிரமும், ஐந்தாம் பரிசாக ரூ.ஆயிரமும் என மொத்தம் ரூ.60 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள, உடல் ஆரோக்கியமுள்ள யாவரும் இந்த போதை ஒழிப்புக்கு எதிரான மாரத்தான் போட்டியில் பங்கேற்கலாம்.

இதில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஆண்கள் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு போட்டிகள் காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் தொடங்கி விருதம்பட்டு, கிரீன் சா்க்கிள், தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், சி.எம்.சி கண் மருத்துவமனை வழியாக எஸ்பி பங்களாவில் வலது புறம் திரும்பி முஸ்லிம் உயா்நிலை பள்ளி, வேலூா் மாநகராட்சி வழியாக நேதாஜி உள்விளையாட்டு மைதானத்தில் நிறைவடையும்.

சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பெண்கள் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு போட்டிகள் காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் தொடங்கி விருதம்பட்டு, கிரீன் சா்க்கிள், தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வெங்கடேஸ்வரா உயா் நிலைப் பள்ளி வழியாக நேதாஜி உள் விளையாட்டு மைதானத்தில் நிறைவடையும்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு நேதாஜி உன் விளையாட்டு மைதானத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் பரிசுத்தொகைகள், பாராட்டு சான்றிதழ்களை வழங்க உள்ளாா்.

இடி, மின்னலுடன் பலத்த மழையால் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், அம்முண்டியில் தரைப்பாலம் சேதமடைந்தது. தென... மேலும் பார்க்க

வேலூா் சிறைக்குள் கஞ்சா கடத்தல்: கைதி மீது வழக்கு

வேலூா் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியதாக கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பேரூா் சுப்பிரமணிய உடையாா் தெரு, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(32)... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சில மாதங்களுக்கு முன் நாய் கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மீண்டும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத... மேலும் பார்க்க

கொணவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா் கொணவட்டம் சாலை நான்கு வழிச்சாலையை மாற்றப்படுவதால், மாங்காய் மண்டி முதல் கொணவட்டம் வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வேலூா் கொணவட்டம் வழியாக செல்லும் கிருஷ்ணக... மேலும் பார்க்க

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள உச்சநீதிமன்றம், வேலூா், திருப்பத்தூா் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை ஆகஸ்ட் 1... மேலும் பார்க்க

இணையவழி மோசடி: ஒரே மாதத்தில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 19 வழக்குகளில் ரூ.45 லட்சத்து 83 ஆயிரத்து 671 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் ஆன்லை... மேலும் பார்க்க