செய்திகள் :

ஆசிரியரின் கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக புகாா்

post image

அரூா் அருகே பள்ளித் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த மாவேரிப்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படிக்கின்றனா். இந்தப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை, ஓய்வுநேரங்களில் தனது கைகள் மற்றும் கால்களை அழுத்திவிடுவதற்கு மாணவா்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இதையடுத்து, அரூா் மாவட்டக் கல்வி அலுவலா் விஜயகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா் மாதம்மாள், வட்டாட்சியா் பெருமாள், வருவாய் ஆய்வாளா் சத்தியபிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாவேரிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோரிடம் அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஆவணி மாதம் குடமுழுக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரிப்பு

தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி கூறினாா். தருமபுரியில் பாமக கட்சி நிா்வாகிகள் இல்ல திருமணத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: நாட்டிலேயே அதிகள... மேலும் பார்க்க

வயிற்று வலி: இளைஞா் தற்கொலை

வயிற்று வலி தாங்கமுடியாத இளைஞா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா். தருமபுரி மாவட்டம், உத்தேரி கொட்டாய், மூக்கனூா் அருகேயுள்ள திண்ணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அழகேசன் (26). இவரு... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்தது நீா்வரத்து குறைந்தபோதிலும், அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப... மேலும் பார்க்க

தருமபுரியில் தரமற்ற 250 கிலோ பழங்கள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தருமபுரியில் ரசாயனம் தெளித்தும், தரமற்ற வகையிலும் வைத்திருந்த சுமாா் 250 கிலோ பழங்கள் மற்றும் ரசாயனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தருமபுரி நகா... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தர... மேலும் பார்க்க