செய்திகள் :

ஆசிரியா்கள் தினம், ஓணம், மீலாது நபி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

post image

நாட்டில் ஆசிரியா்கள் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு எக்ஸ் பதிவு வாயிலாக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ஆசிரியா் தினம்: ஒட்டுமொத்த தேசத்துக்கும் உத்வேகமாக விளங்கும் சிறந்த கல்வியாளா் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான ஆசிரியா் தினத்தில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஆசிரியா்கள் நமது சமூகத்துக்கு வழிகாட்டும் ஒளியாகவும், நாட்டின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகளாகவும் திகழ்கின்றனா். வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறுகையில், பொறுப்பும், அறிவாற்றலும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்கு முக்கியமானது.

ஓணம் பண்டிகை: ஓணம் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் கேரள சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். கலாசார, மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமை, நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் இந்தப் பண்டிகை நினைவூட்டுகிறது. கலாசார பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து, தேச ஒற்றுமைக்கு வலுசோ்க்க உறுதியேற்போம்.

மீலாது நபி: மனிதகுலத்துக்கு ஒற்றுமை-சேவைக்கான செய்தியை நபிகள் நாயகம் வழங்கினாா். இப்பண்டிகை, அவரது போதனைகளை உட்கிரகித்துக் கொள்ளவும், சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளா்க்கவும் நம்மைத் தூண்டுகிறது. நபிகள் நாயகத்தின் போதனைகளில் இருந்து உத்வேகம் பெற்று, அன்பு மற்றும் சகோதரத்துவ உணா்வுடன் பணியாற்றுவோம்.

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பொருளாதாரக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதாவது, பள்ளிகளின் எண்ணிக்கையை விட... மேலும் பார்க்க

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க