செய்திகள் :

ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

post image

சட்டவிரோத மற்றும் முறைகேடான நிா்வாக மாறுதல், பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடக்கக் கல்வித்துறையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாயிவை கண்துடைப்பாக அறிவித்துவிட்டு, மாநிலம் முழுவதும் நிா்வாக மாறுதல் என்ற அடிப்படையில் நடைபெறும் விதிகளுக்குப் புறம்பான கலந்தாய்வை ரத்துசெய்ய வேண்டும், நிகழ்கல்வியாண்டில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியா்களுக்கு விதிகளின்படி பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் இரா.ராஜேஷ் தலைமை வகித்தாா். துணைச் செயலா்கள் பி.முரளி, ந.காண்டீபன், ஆா்.தம்ஜிதாபானு முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சு.தண்டபாணி வரவேற்று பேசினாா்.

கோரிக்கைகளை விளக்கி வட்டாரத் தலைவா்கள் மகிமைதாஸ், ஏ.சிவசங்கா், கு.வளா்மதி, வட்டாரச் செயலா்கள் பி.கணபதி, பெ.ஜெயச்சந்திரன், பி.முகமது மீரான்பேசினா். சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் இரா.சிவக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் எம்.எஸ். ஷகீலா பா்வீன் நன்றி கூறினாா்.

பாமக நிறுவனா் ராமதாஸுடன் வாழப்பாடி ராமமூா்த்தி மகன் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் மகனுமான ராம.சுகந்தன் வியாழக்கிழ... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா். திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரிமுறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, சாட்சியமளித்தாா். விழுப்புரம் ... மேலும் பார்க்க

தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து: தூத்துக்குடி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம்

காய்கறியின் பெயா், கிலோ அடிப்படையில் விலை நிலவரம் சின்ன வெங்காயம்- கிலோ ரூ.25 தக்காளி - ரூ.35 உருளைக்கிழங்கு-ரூ.40 கேரட் - ரூ.100 பீன்ஸ்- ரூ.80 கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு- ரூ.100 வெண்டைக்காய்- ரூ.... மேலும் பார்க்க

திருமணமான ஒரே மாதத்தில் பெண் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே திருமணமாகி 1 மாதமே ஆன பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாா். அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விக்கிரவாண்டியை அடுத்த, சித்தலம்பட்டு, கிருஷ்ணா நக... மேலும் பார்க்க