செய்திகள் :

ஆசிரியா், தொழிலாளி வீடுகளில் 7 பவுன் நகை, ரூ.30,000 திருட்டு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆசிரியா், தொழிலாளி வீடுகளின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

அரசுப் பள்ளி ஆசிரியை வீடு:

வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி உஷா (51). இவா் மாமண்டூா் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். கணவா் குணசேகரன் இறந்துவிட்டாா்.

கோடை விடுமுறை என்பதால் உஷா, பெங்களூருவில் உள்ள மகள் வீட்டுக்கு ஏப்.30-ஆம் தேதி சென்றுள்ளாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீடு திறந்த நிலையில் இருப்பதை அறிந்த எதிா் வீட்டாா் உஷாவுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதன் பேரில், விரைந்து வந்த ஆசிரியை உஷா வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து உஷா தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளி வீட்டில் திருட்டு:

செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம் மாரிமுத்து தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (35). இவா், செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சதீஷ் கடந்த 30-ஆம் தேதி, குடும்பத்தோடு மாமியாா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.

இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனடியாக சதீஷ் வந்து பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தொழிலாளி சதீஷ் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் சாா்பில், புதி... மேலும் பார்க்க

கள்ளத்தனமாக மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், வெண்குன்றம் கிராமம் வழியாக செவ்வாய்க்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அங்... மேலும் பார்க்க

இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 4 கிராம் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வ... மேலும் பார்க்க

கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா

கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணிக்கு ஆரிய வைசிய பெண்கள் பால் குடங்களை சுமந்தவாறு ஊ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மதுக் கடைகளுக்கு மே 12-இல் விடுமுறை

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலை நகரில் இயங்கும் மதுக் கடைகள், மதுக்கூடங்களுக்கு வரும் 12-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

கலசப்பாக்கம் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக டி.காா்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றாா். வேலூா் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய டி.காா்த்தி பதவி உயா்வு பெற்று கலசப்பாக்கம் ... மேலும் பார்க்க