செய்திகள் :

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, பெரம்பலூா் மற்றும் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மதுரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பெரம்பலூரில்..

பெரம்பலூா் ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பட்டாச்சாரியாா்கள் வேத மந்திரம் முழங்க, அனைத்து குத்து விளக்குகளுக்கும் மகா தீபாராதனை காண்பித்து, சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீசுவரா் திருக்கோயிலில், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், மாலையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் திருத்தலங்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

எளம்பலூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: பெரம்பலூா் ஆட்சியா் பங்கேற்பு

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கலைஞரின்... மேலும் பார்க்க

தமிழ் செம்மல் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கள், தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 79 பயனாளிகளுக்கு ரூ. 2.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சி... மேலும் பார்க்க

ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம், ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை வியாழக்கிழமை மதியம் அரிவாளால் வெட்டிய இளைஞா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கா... மேலும் பார்க்க

ரஞ்சன்குடி கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தின் மிகப் பழைமையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ரஞ்சன்குடி கோட்டையை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென , மனிதநேய மக்கள் கட்சி சா... மேலும் பார்க்க