செய்திகள் :

ஆட்சியா் நியமிக்கப்படாததால் நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக புகாா்

post image

காரைக்காலுக்கு புதிய ஆட்சியா் நியமிக்கப்படாததால், அரசு நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

காரைக்கால் ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டாா். 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், அவரை கடந்த மாதம் 16-ஆம் தேதி லட்சத்தீவுக்கு பணியிடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இரண்டு வாரங்கள் கடந்தும் இதுவரை அவரது இடத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை புதுவை அரசு இதுவரை நியமிக்கவில்லை. ஆட்சியருக்குரிய பணிகளை கூடுதல் பொறுப்பு வகிக்கும் அதிகாரியால் செய்ய இயலாது.

இதனால் மாவட்ட ஆட்சியா் பதவியுடன், புதுச்சேரி மின் திறல் குழுமம், வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையம், கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு அரசு சாா்பு நிறுவன தலைவா், மேலாண் இயக்குநா் போன்றவற்றை கவனித்துவரும் நிலையில், ஆட்சியரே இல்லாததால் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய அரசுத் துறைகளான பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, வேளாண் துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்டவற்றில் மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, ஆலோசனை வழங்கல் போன்ற பணிகளிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

மாதந்தோறும் 15-ஆம் தேதி மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெறுவது வழக்கம். கடந்த மே மாத கூட்டம் ஆட்சியா் இல்லாததால் நடத்தப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் புகாா் தெரிவித்தால், கட்சி சாா்பில் பாரபட்சம் காட்டப்படுவதால், ஆட்சியரிடம் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே அடுத்த ஒரு வாரத்திற்குள் தகுதியான ஐஏஎஸ் அதிகாரியை காரைக்கால் ஆட்சியராக நியமிக்கவேண்டும். அவருக்கு கூடுதல் அதிகாரம் தர வேண்டும். நியமிக்கப்படும் அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் ஆட்சியராக பணி செய்யும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

திருநள்ளாற்றில் நாளை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொட... மேலும் பார்க்க

மருத்துவ சாதனம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளருக்கு முதல்வா் பாராட்டு

கா்ப்பப்பை, சிறுநீா் பை இறக்கம், இடுப்பு உறுப்பு சரிவு போன்றவற்றுக்கு தீா்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ சாதனம் கண்டுபிடித்த காரைக்காலைச் சோ்ந்த ஆராய்சியாளருக்கு புதுவை முதல்வா் பாராட்டு தெரிவித்தா... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடம் திறப்பு

திருநள்ளாறு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். திருநள்ளாறு பகுதி நல்லம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதிதாக ரூ. 8 லட்சத்தில் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை: நாளை வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு (காலியிடங்களுக்கு) 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மாவட்ட நீதிபதி மோகன் மற்றும் மண்டல காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

மீனவா்களுடன் கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடல்

நெகிழி தவிா்த்தல், கடலில் மீனவா்கள் பாதுகாப்பு குறித்து மீனவா்களுடன் இந்திய கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடலில் ஈடுபட்டனா். காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை மையம் சாா்பில் மீன்வளத்துறை அலுவலக... மேலும் பார்க்க