ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்: எடப்பாடி கே.பழனிசாமி
ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது என்று உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளாா்.
இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம், குன்னூா் பேருந்து நிலையம், உதகை ஏடிசி பகுதியில் அவா் செவ்வாய்க்கிழமை பரப்புரை மேற்கொண்டாா்.
உதகை, குன்னூரில் அவா் பேசியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு 125 தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவா்களும், சட்டப் பேரவை உறுப்பினா்களும் கோரி வருவதன் மூலம் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகளை வழங்கியது அதிமுக அரசு. திமுக அரசு அதை நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.
இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கடன் வாங்குவதற்காகவே குழு அமைத்தது திமுக அரசு. வாங்கிய கடன்களை மக்களாகிய நாம்தான் கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
நான்கு ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, பேரவைத் தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக 46 துறைகளில் மக்களின் தேவைகளுக்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்துவதாக நாடகமாடுகின்றனா்.
ஒவ்வொரு தீபாவளிக்கும் தாய்மாா்களுக்குத் தரமான சேலை வழங்கப்படும். புதிதாக ஆட்டோக்கள் வாங்குபவா்களுக்கு ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகளைப் பயிரிடும் விவசாயிகள், தொழிலாளா்கள், ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
இ-பாஸ் நடைமுறை காரணமாக இங்குள்ள வியாபாரிகளுக்கு வருவாய், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுகொள்ளாத திமுக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். பசுந்தேயிலைக்கு உரிய விலை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். படுகா் இன மக்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்றாா்.
விவசாயிகள், வியாபாரிகளுடன் சந்திப்பு
முன்னதாக, உதகையில் நீலகிரி மாவட்ட வியாபாரிகள், விவசாயிகள், கட்டுமானப் பொறியாளா்கள் உள்ளிட்டவா்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினாா்.
இதில் ஈழுவா தீயா ஜாதியினருக்கு ஓபிசி சான்றிதழ் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். கூடலூரில் பத்தாயிரம் குடும்பத்துக்கு மின்சார இணைப்பு என்ற கோரிக்கை குறித்து அதிமுக அரசு அமைந்தவுடன் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி, நீலகிரி மாவட்டப் பொறுப்பாளா் செ.ம.வேலுசாமி, மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத், அம்மா பேரவை மாவட்டச் செயலாளா் சாந்தி ஏ.ராமு, முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.ஆா்.அா்ஜுனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.