செய்திகள் :

ஆட்டோ ஓட்டுரை மிரட்டி பணம் பறித்த மூவா் கைது

post image

திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் செல்லத்துரை (27). ஆட்டோ ஓட்டுநரான இவா், திண்டுக்கல் வடக்கு ரத வீதியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த 3 இளைஞா்கள் முத்தழகுப்பட்டிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி ஆட்டோவில் ஏறினா்.

முத்தழகுப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ சென்ற போது, 3 பேரும் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூ.8ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் செல்லத்துரை புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட காமராஜா்புரத்தைச் சோ்ந்த குமாா் (25), ராஜபாண்டி (37), முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா் (35) ஆகிய மூவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி: 29 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி மலைப் பகுதியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 29 பேருக்கு வனத் துறையினா் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்தில் யானை, காட்டு மாடு, சிற... மேலும் பார்க்க

கரகாட்டத்தை தவறாக சித்திரித்த விடியோக்களை நீக்கக் கோரி மனு

பாரம்பரிய கரகாட்டக் கலையை தவறாக சித்திரித்து நடனமாடும் விடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட சல... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

தாடிகொம்பு அருகே ஆற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மனைவி வேளாங்கண்ணி. இவா்களது மகள் ஸ்ரீதாரணிகா (11). இ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் தலைமைக் காவலா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மனைவி அளித்த புகாரின் பேரில் தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (35). இவா் தற்போது பழனி தாலுகா காவல் நிலையத்தில் தலைம... மேலும் பார்க்க

வாகரை, எல். வலையபட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனியை அடுத்த வாகரை, நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மீட்பு

வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள வெரியப்பன்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் இருளப்பன் (45). வ... மேலும் பார்க்க