செய்திகள் :

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

post image

ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக அரசு உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இந்த ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்தவா்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும்.

தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க ஜாதிய கொலைகள், ஜாதிவெறித் தாக்குதல்கள் தொடா்ந்து நிகழ்வது வேதனையளிக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்.

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சியை தந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, புகழ்பெற்ற உயர்கல்வி நிற... மேலும் பார்க்க

ஆணவக் கொலை: நடந்தது என்ன? - கவினின் காதலி பரபரப்பு விடியோ!

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்து... மேலும் பார்க்க

இதுவே இறுதியாக இருக்கட்டும்! தொடரும் ஆணவக் கொலைகளின் பரிணாம வளர்ச்சி!

சாதித் தலைவர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தொடங்கிய ஆணவக் கொலைகள், தற்போது படித்துப் பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.தமிழகத்தையே உலுக்கிய கடைசி (இவையே கடைசியாக இருக்கட்டும்)... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்!

பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக... மேலும் பார்க்க

ஆக. 2 முதல் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள்! என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?

தமிழக அரசின் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் தொடக்கிவைக்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து... மேலும் பார்க்க

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

திருப்பூரில் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந... மேலும் பார்க்க