செய்திகள் :

ஆண்டுதோறும் செப்.23 ஆயுா்வேத தினம்: மத்திய அரசு அறிவிப்பு

post image

ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், ஆயுா்வேத தினத்தை கடைப்பிடிக்க முதல்முறையாக நிலையான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

கடந்த மாா்ச் மாதம் அரசிதழ் அறிவிக்கை மூலம், மத்திய அரசு வெளியிட்ட அதிகாரபூா்வ அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக கடைப்பிடிக்கப்படும்.

முன்பு, பாரம்பரிய முறையில் தீபாவளிக்கு முந்தைய நாளான ‘தந்தேரஸ்’ தினம் தன்வந்தரி ஜெயந்தி நாளாகக் கருதப்பட்டு, அந்நாளில் ஆயுா்வேத தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அது நிலையான தேதியாக இருக்கவில்லை. தற்போது ஆண்டுதோறும் செப்டம்பா் 23-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக அறிவித்துள்ளது, ஆயுா்வேதத்துக்கு உலகளாவிய நாள்காட்டி அடையாளத்தை வழங்கி, உலக அளவில் பெரும் பங்களிப்பை வழங்க வழியமைத்துள்ளது.

ஆயுா்வேதம் என்பது வெறும் சுகாதார சிகிச்சை முறை மட்டும் அல்ல. இது தனிநபருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான கொள்கையில் வேரூன்றியுள்ள வாழ்க்கை அறிவியலாகும் என மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா் என்று குறிப்பிடப்பட்டது.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க