செய்திகள் :

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

post image

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் அருகே காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், தனது மனைவி வேறொரு ஆணுடன் வீட்டில் தங்கியிருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்கள் இருவரையும் அடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் விநோதம் என்னவென்றால், அந்த காவலரின் மனைவியும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பதவியில் இருப்பவர்; அதுபோல, அவருடன் இருந்த ஆண் நபரும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கணவனும் மனைவியும் வெவ்வேறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்ததால் அவர்கள் இருவரின் பணி நேரமும் மாறுதலுக்குட்பட்டதாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலை 8 மணியளவில் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற கணவன், வீட்டை திறந்து பார்த்தபோது அங்கே அவரது மனைவி தனது நண்பர் அதாவது இன்னொரு காவலருடன் தனிமையில் இருந்துள்ளார்.

‘தனது கணவர் பணி நேரம் முடித்து வீட்டுக்கு வர தாமதமாகும்’ என்று கருதிய மனைவிக்கு கணவர் சீக்கிரமே வீட்டுக்கு திரும்பியதால் சிக்கல் ஏற்பட்டு பிரச்சினை பூதககரமாக வெடித்துள்ளது.

இதையடுத்து, அவரது மனைவி தனது ஆண் நண்பருடன் இருந்த அறையின் கதவைப் பூட்டி உள்ளேயே இருந்துகொண்டு வெளியே வர மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

இப்பிரச்சினையால் ஏற்பட்ட அலறல் சத்தத்தில் அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டுக்குள் சென்று அறையின் கதவைத் திறந்து மூவரையும் சமாதானப்படுத்திய போலீஸார், அதன்பின் கணவன் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கதவைத் திறந்ததும் அவர்கள் இருவரையும் கணவன் அடித்து தாக்கிய விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சினையை முழுக்க முழுக்க மேற்கண்ட மூவரும் பேசி தீர்த்துக் கொள்ளட்டும், யாரும் அவசரப்பட்டு தலையிட வேண்டாமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தனது வீட்டுக்குள், இன்னொரு போலீஸ் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த தனது போலீஸ் மனைவியை அவரது போலீஸ் கணவன் பூட்டி வைத்து தாக்கும் விடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Constable's wife caught with lover in Kushinagar, lover is also police, wife is police, husband is also police

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்... மேலும் பார்க்க

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக்... மேலும் பார்க்க

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழ... மேலும் பார்க்க

மமதா பேச்சுக்கு எதிர்ப்பு! மேற்கு வங்க பேரவை அமளியில் பாஜக கொறடா காயம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது காயம் அடைந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.வெளி மாநிலங்களில்... மேலும் பார்க்க

மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும்: ராகுல்

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவ... மேலும் பார்க்க