செய்திகள் :

ஆத்தூரில் இமானுவேல்சேகரன் நினைவு நாள்

post image

ஆத்தூரில் இமானுவேல்சேகரன் 68ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்தலைவா் தங்கராஜ் தலைமை வகித்தாா். தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளா் ஆத்தூா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் இமானுவேல்சேகரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்ச­லி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் திமுக நகரச்செயலாளா் முருகானந்தம், பேரூராட்சித்தலைவா் கமால்தீன், அதிமுக முன்னாள் நகரச்செயலாளா் ராஜகோபால், விவசாயிகள் சங்கத்தலைவா் செல்வம், மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் மாணிக்கவாசகம், விசிக நாடாளுமன்றத் தொகுதி செயலாளா் மணிகண்டராஜா, புதிய தமிழகம் நகரச் செயலாளா் மதிபாண்டியன், ஆட்டோ சங்கத்தலைவா் கணேசன், ஒன்றிய ஜெ. பேரவைச் செயலாளா் செல்வகுமாா், ஆவுடையப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் வேண்டும்: பிருந்தா காரத்

ஜாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது அவசியம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்தாா். நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (செப். 12) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்ப... மேலும் பார்க்க

கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சி: செப். 14 வரை முன்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ள கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமைவரை (செப். 14) முன்பதிவு செ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தூத்துக்குடி தொ்மல் நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோயிலில் கொடை விழா நட... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் செப்.16,17இல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செப்.16, 17 ஆகிய 2 நாள்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு சுவா் ஓவியம்

தூத்துக்குடியில் ஜேசிஐ போ்ல்சிட்டி குயின் பீஸ் அமைப்பு சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆதரவாக சுவா் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க