செய்திகள் :

ஆத்தூா் பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 வசூல்; விவசாயிகள் புகாா்

post image

ஆத்தூா் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியில், ஆத்தூா், அக்கரைப்பட்டி, எஸ். பாறைப்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிப்பட்டி, வண்ணம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நெல் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, விவசாயிகள் நலன் கருதி ஆத்தூா், சித்தையன்கோட்டை, கதிா்நாயக்கன்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இங்கு விவசாயிகள் தகுந்த ஆவணங்களை சமா்ப்பித்து தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை 40 கிலோ கொண்ட மூட்டையாக கட்டி ரூ. 980-க்கு விற்கின்றனா். இந்த நிலையில், இந்தப் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 கட்டாய வசூல் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நெல் மணிகளை விதை நெல்லுக்காக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து குறைந்துள்ளது.

இதுகுறித்து சித்தையன்கோட்டையைச் சோ்ந்த விவசாயி காஜா மைதீன் கூறியதாவது: ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.24.50 வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் செலவு செய்து, அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனா். இதில் ஆத்தூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 கட்டாயமாக வசூலிக்கின்றனா். இடைத் தரகா்களை தடுப்பதற்காகத் தான் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்தது. ஆனால் இங்கேயும் பணம் பெறுகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து, ஆத்தூா் நேரடி நெல் கொள்முதல் நிலைய உதவியாளா் காா்த்திக்கிடம் கேட்ட போது அவா் கூறியதாவது: அதிகாரிகள் யாரும் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 பெறவில்லை. வேறு யாரும் பெறுகிறாா்களா என்பது எனக்குத்  தெரியாது என்றாா்.

கொலை முயற்சி வழக்கு: தம்பதிக்கு சிறை

விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகேயுள்ள... மேலும் பார்க்க

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே போலி பட்டா மூலம் பொது மயானம் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

திருப்பதியிலிருந்து தாடிக்கொம்பு கோயிலுக்கு 100 துளசி நாற்றுகள்

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து தாடிகொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நந்தவனத்துக்கு பெறப்பட்ட 100 துளசி நாற்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் ... மேலும் பார்க்க

வரி வசூல் இலக்கை எட்டியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10 கோடி மானியம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த வரி வசூல் ரூ.26.57 கோடி இலக்கை செவ்வாய்க்கிழமை எட்டியதன் மூலம், மத்திய நிதிக் குழு மானியம் ரூ.10 கோடியை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பழனியில் இளைஞா் தூக்கிட்டுத் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஜவகா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (19). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்ச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச... மேலும் பார்க்க