செய்திகள் :

ஆத்தூா், புதுக்கோட்டையில் இன்றும், நாளையும் திமுக பொதுக் கூட்டம்

post image

ஆத்தூா், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசுக்கு நிதி தர மறுப்பு, மும்மொழி கொள்கை திணிப்பு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை கண்டித்து, மத்திய அரசிற்கு எதிராக தமிழத்தின் அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள் நடத்த துணை முதல்வரும் இளைஞா் அணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, ஆத்தூா், புதுக்கோட்டையில் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இரு கூட்டங்களிலும் மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம் தலைமை வகிக்கிறாா். நான் சிறப்புரையாற்றுகிறேன்.

முதல் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் திமுக உயா்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான பொன் முத்துராமலிங்கம், இளம் பேச்சாளா் மு.காா்த்திக், இரண்டாவது கூட்டத்தில் திராவிட இயக்க சிந்தனையாளா் சூா்யா சேவியா், கழக இளம் பேச்சாளா் கோ.சண்முகநாராயணன் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா்.

இக்கூட்டங்களில் அந்தப்பகுதி இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள், ஒன்றியச் செயலா்கள், பேரூராட்சித் தலைவா் உள்ளிட்டோா் முன்னிலை வகிக்கின்றனா். எனவே, கட்சியின் அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

கோவில்பட்டியில் போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக நடைபெறும் மது , போதை பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மாமன்னா் பூலித் தேவா... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மாா்ச் 29இல் காவல்துறை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் சனிக்கிழமை (மாா்ச் 29) ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

கருப்புச் சட்டை அணிந்து அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில், அரசுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில், சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்... மேலும் பார்க்க

கயத்தாறு: கோயிலில் பொருள்கள் திருட்டு

கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சியில் அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். திருமங்கலக்குறிச்சி ஊருக்கு வடக்கே அனைத்து சமுதாயத்துக்கு பா... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறை... மேலும் பார்க்க

29இல் கோவில்பட்டி என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 29ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இ... மேலும் பார்க்க