ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் தெளிவாக பதிலளிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
ஆந்திர முன்னாள் முதல்வரின் கார் முன் விழுந்த தொண்டர்: உடல் நசுங்கி பலி!
விஜயவாடா: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் கார் முன்னே விழுந்த தொண்டரின் கழுத்தில் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர் சீலி சிங்கையா என்பதும் அவருக்கு வயது 65 என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுள் ஒருவராவார்.
சட்டெனப்பள்ளி தொகுதிக்கு இன்று(ஜூன் 22) வருகை தந்திருந்த ஜெகன்மோகன் ரெட்டியைக் காண பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சட்டெனப்பள்ளி தொகுதிக்குள்பட்ட தடேப்பள்ளியிலிருந்து புறப்பட்டு ரெண்டேப்பல்லாவுக்கு பேரணியாக காரில் சென்ற ஜெகனுக்கு வழிநெடுகிலும் அவரது தொண்டர்கள் திரண்டு உற்சாகப்படுத்தினர்.
அந்தக் கூட்டத்தில் ஒருவராக முன் வரிசையில் நின்று கொண்டிருந்த சீலி சிங்கையா எதிர்பாராதவிதமாக ஜெகன்மோகன் வந்து கொண்டிருந்த காரின் முன், நிலை தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் விழுந்ததை கவனிக்காத ஓட்டுநரும் உடனடியாக வாகனத்தை நிறுத்தாததால், காரின் முன்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. அதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த பேரணிக்கு காவல்துறையால் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டிருந்த போதிலும், அதையும் மீறி பலர் திரண்டதால் கூட்ட நெரிசல் உண்டானது. மூன்று வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாதெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததையும் புறக்கணித்து ஏராளமான கார்களும் ஜெகனைப் பின்தொடர்ந்தன. இந்தநிலையில், தொண்டர் ஒருவர் கார் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.