செய்திகள் :

ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யாவின் சிலை திறப்பு!

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான கொனிஜேட்டி ரோசய்யாவின் சிலையை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இன்று (ஜூலை 4) திறந்து வைத்தார்.

ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கொனிஜேட்டி ரோசய்யாவின் பிறந்த நாள் இன்று (ஜூலை 4) கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்த நாளை மாநிலம் முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் லக்டி கா புல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது முழு உருவச் சிலையை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இன்று (ஜூலை 4) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமர்கா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு ரோசய்யாவின் சிலைக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

இதேபோல், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் வொய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரும் ரோசய்யாவுக்கு மரியாதைச் செலுத்தியுள்ளனர்.

முன்னதாக, சுமார் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் சர்ச்சைகள் அற்ற தலைவராகக் கருதப்படும் ரோசய்யா தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Congress leader Mallikarjuna Kharge today (July 4) unveiled the statue of former Andhra Pradesh Chief Minister Konijetti Rosaiah in Hyderabad, Telangana.

இதையும் படிக்க:கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை!

இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் சீன ஆயுதங்கள்: லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங்

‘இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட சண்டையில் தங்களுடைய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்திக் கொண்டது’ என்று இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா். சிங் தெரிவித்தாா். பஹல்... மேலும் பார்க்க

நக்ஸல்வாதம் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டது: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் இப்போது நக்ஸல்வாதம் 5 முதல் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். ஹைதரபாதில் சுதந்தரப் போராட்ட வீரா் அல்லூரி சித்தராம... மேலும் பார்க்க

கச்சத்தீவை தர மாட்டோம்: இலங்கை

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், ‘இந்திய மீனவா்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களைக... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.அதன்படி, விக்டோரியா லேஅவுட்டின் குடியிருப்பு வீடு, பெங்களூருவில... மேலும் பார்க்க

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க