வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
ஆபரேஷன் சிந்தூர் எப்படிப்பட்ட வெற்றி? போர் நிபுணர் அளித்திருக்கும் மாஸ் விளக்கம்!
புது தில்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர், மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக, போர் நிபுணர் ஜான் ஸ்பென்ஸர் தெரிவித்துள்ளார்.
மாடர்ன் வார் இன்ஸ்டிடியூட்டில் நகர்ப்புற போர் ஆய்வுகளின் தலைவராகப் பணியாற்றி வருகிறார் ஜான் ஸ்பென்ஸர். நகர்ப்புற போர்த் திட்டத்தின் இணை இணையக்குநராகவும் உள்ளார்.
உலகம் முழுவதும் நடைபெறும் போர்களைப் பற்றி ஆராய்ந்து பல்வேறு தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து நிறுத்தப்பட்டுள்ள சண்டை குறித்தும், சிந்தூர் தாக்குதல் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்திருக்கிறார்.
அதில் குறிப்பிடத்தக்க விஷயம் இதுதான், அதாவது இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கை என்பது, அதன் பலவீனம் அல்ல - அது முதிர்ச்சியின் வெளிப்பாடு. அது செலவுகளை கணக்கிட்டது, எல்லைகளை மறுவரையறை செய்து, தனது எல்லையில் தங்களுக்கான ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியா ஒரே ஒரு தாக்குதலுக்கு மட்டும் பதிலளிக்கவில்லை. அது, இதுநாள்வரை இருந்த பயங்கரவாதத்தின் அடிப்படை சமன்பாட்டையே மாற்றியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இவை அப்பட்டமாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று கூறப்படுகிறது.