செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் எப்படிப்பட்ட வெற்றி? போர் நிபுணர் அளித்திருக்கும் மாஸ் விளக்கம்!

post image

புது தில்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர், மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக, போர் நிபுணர் ஜான் ஸ்பென்ஸர் தெரிவித்துள்ளார்.

மாடர்ன் வார் இன்ஸ்டிடியூட்டில் நகர்ப்புற போர் ஆய்வுகளின் தலைவராகப் பணியாற்றி வருகிறார் ஜான் ஸ்பென்ஸர். நகர்ப்புற போர்த் திட்டத்தின் இணை இணையக்குநராகவும் உள்ளார்.

உலகம் முழுவதும் நடைபெறும் போர்களைப் பற்றி ஆராய்ந்து பல்வேறு தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து நிறுத்தப்பட்டுள்ள சண்டை குறித்தும், சிந்தூர் தாக்குதல் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்திருக்கிறார்.

அதில் குறிப்பிடத்தக்க விஷயம் இதுதான், அதாவது இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கை என்பது, அதன் பலவீனம் அல்ல - அது முதிர்ச்சியின் வெளிப்பாடு. அது செலவுகளை கணக்கிட்டது, எல்லைகளை மறுவரையறை செய்து, தனது எல்லையில் தங்களுக்கான ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியா ஒரே ஒரு தாக்குதலுக்கு மட்டும் பதிலளிக்கவில்லை. அது, இதுநாள்வரை இருந்த பயங்கரவாதத்தின் அடிப்படை சமன்பாட்டையே மாற்றியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இவை அப்பட்டமாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானுடன் எப்போதெல்லாம் சண்டை?

ஜம்மு-காஷ்மீரின் கார்கில் பகுதியை பாகிஸ்தானிய படைகளும் பயங்கரவாதிகளும் ஆக்கிரமித்தபோது 1999ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகக் கடுமையான கார்கில் போர் உண்டானது.இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற ப... மேலும் பார்க்க

வருமான வரித் தாக்கல்: பழவம்-16ல் புதிய மாற்றம்! ஏன் தெரியுமா?

2025-26ஆம் நிதியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதமே வந்துவிட்டது. வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான வரி கணக்குத்தாக்கலுக்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருவார்கள்.கடந்த 2024 - 25ஆம் நித... மேலும் பார்க்க

காலில் சாதாரண செருப்பு.. தள்ளாடியபடி வந்த பீமவ்வா! இவருக்காக நெறிமுறையை மீறிய முர்மு!

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில் வாழ்ந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பீமவ்வா தொட்டபலப்பா ஷில்லேக்யதாரா (96) நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.ஒட்டு ... மேலும் பார்க்க

டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

அமெரிக்காவின் 47ஆவது அதிபராகவும் இரண்டாவது முறையாகவும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று, 100 நாள்கள் நிறைவடைந்த நிலையில், 100 நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை மிக்சிகன் மாகாணத்தில் டிரம்ப் நடத்தினார். இந்த நிகழ்... மேலும் பார்க்க

கோடைக்கால விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் என்னென்ன?

கோடைக்காலத்தையொட்டி பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. சிறிய துணிக்கடை முதல் பெரிய மின்னணு பொருள்கள், கார் விற்பனை நிலையங்கள் வரை வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கோடைக்கால சிற... மேலும் பார்க்க

அரிசி கிலோ ரூ.340, கோழிக்கறி ரூ.800; அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

ஏற்கனவே, பாகிஸ்தான் பொருளாதாரம் அதளபாதாளத்தில் விழுந்துகிடக்கும் நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், பாகிஸ்தான் - இந்தியா இடையே பதற்றம் ஏற்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.ஏப்ரல் 22ஆ... மேலும் பார்க்க