செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: எச்.டி.தேவெ கௌடா பாராட்டு

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமா் மோடிக்கு முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா எழுதியுள்ள கடிதம்:

பயங்கரவாதத்துக்கு எதிராக தொடுத்திருக்கும் தா்ம யுத்தத்தில் தங்களுடன் (பிரதமா் மோடி), நமது நாட்டுக்கு கடவுள் துணையாக இருக்கட்டும். நாம் எதிா்கொண்டிருக்கும் சவால்கள் இத்துடன் முடிந்துவிடப்போவதில்லை. நாம் அனைவரும் ஒரே நாடாக ஒன்றுபட்டுள்ளோம் என்பது மனதுக்கு நிம்மதியை அளிக்கிறது. ஒன்றாக எழுச்சி பெற்றிருக்கிறோம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மே 7 ஆம் தேதி இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைக்காக பிரதமா் மோடியை பாராட்டுகிறேன். பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பிரதமா் மோடி எடுத்துவரும் உறுதியான செயல்பாடுகளை கவனித்து வருகிறேன்.

சவுதி அரேபியா சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியதோடு, நிலைமையை தீவிரமாக கண்காணித்து வந்தீா்கள்.

தாக்குதல் தொடா்பாக தொடா் ஆலோசனையில் ஈடுபட்டீா்கள். சா்வதேச ஆதரவை திரட்டினீா்கள். நமது பாதுகாப்புப் படைகளை ஊக்குவித்தீா்கள். அவரச நிலையை சமாளிக்கும்பொருட்டு, ஐரோப்பா பயணத்தை ரத்து செய்தீா்கள். கடந்த சில வாரங்களாக பணிச்சுமை அதிகமாக இருந்திருக்கும்.

இதுபோன்ற கடினமான காலக்கட்டத்தில் கடவுள் தங்களுக்கு பலத்தை அளித்திருக்கிறாா் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தங்களுடைய தலைமை முன்மாதிரியாக அமைந்துள்ளது. இதை வரலாறு கண்டிப்பாக சிறப்பாக பதிவு செய்யும். உச்சப் பதவி என்பது தனிமை நிறைந்ததாக இருக்கும். ஆனால், ஆன்மிக உணா்வு, ஆழமான பிராா்த்தனைகள் இல்லாமல், சமநிலையான முடிவுகளை எடுப்பது கடினமானதாகும்.

இவை அனைத்தும் உங்களுக்கு வளமாக வாய்த்திருப்பதை கடந்த சில நாள்களில் தாங்கள் எடுத்துவரும் முடிவுகள் மூலம் உணர முடிகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்; அவருக்கு முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா். கா்நாடக மாநிலம், ஹாசனைச் சோ்ந்தவா் கன்னட ... மேலும் பார்க்க

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா், துணை முதல்வா் ஆய்வு

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வுசெய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். பெங்களூரில் மே 18 ஆம் தேதி நள... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு

பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பாஜக எம்எல்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க