செய்திகள் :

ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை

post image

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதில், மூஸா ஃபெளஜியும் ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் டாச்சிகம் தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள ஹர்வான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று (ஜூலை 28) துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

பயங்கரவாதிகளை அப்பகுதியில் இருந்து அகற்றும் இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் மகாதேவ் எனப் பெயரிடப்பட்டது. பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்வான் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினரும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள், ஸ்ரீநகர் நகரில் இருந்து 20 கி.மீ சுற்றளவில் உள்ள டாச்சிகம் பகுதியில், தங்கள் தளங்களை மாற்றியிருக்கலாம் என உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | கர்னல் சோஃபியாவை அவமதித்தது குறித்து ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? சு.வெங்கடேசன்

Operation Mahadev: Pahalgam terror attack mastermind Hashim Musa Fauji killed

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம்! அமித் ஷா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மக்களவையில் நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத... மேலும் பார்க்க

வருகிறது செயற்கை தங்கம்! இனி தங்கம் விலை என்னவாகும்?

பெரும்பாலான வேதியியல் விஞ்ஞானிகளின் கனவாக இருப்பது செயற்கை தங்கம்தான். ஆனால் அது கனவாகவே இருந்துவிடுமா? நிஜமாகுமா என்ற கேள்விக்கு அமெரிக்க புத்தாக்க நிறுவனம் ஒன்று பதில் அளித்துள்ளது.நாள்தோறும் பலரும்... மேலும் பார்க்க

கோகோயின் உரை.. பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிரூபிக்கிறது: அஸ்ஸாம் முதல்வர்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கோகோயின் உரை அவர் பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிருப்பித்துள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் ... மேலும் பார்க்க

தில்லிக்கு இன்று ரெட் அலர்ட்! தொடர் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 29) அம்மாநிலத்துக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பருவமழை தொடங்கியது முதல், தொடர்... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் பேர் மனு! - தமிழக அரசு தகவல்

தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இதுவரை 12.65 லட்சம் பேர் மனு அளித்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துற... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்! அமித் ஷா

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தா... மேலும் பார்க்க