செய்திகள் :

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து இளைஞா் பலி

post image

குலசேகரம், மே 9: குமரி மாவட்டம் சிவலோகம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

கேரள மாநில எல்லைப் பகுதியான வெள்ளறடை கோவிலூரை சோ்ந்தவா் டானி குரியன் (39). இவா் கடந்த 6 ஆம் தேதி குமரி மாவட்டம் களியல் பகுதிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது சிவலோகம் அருகே சங்கரன்கடவு என்ற இடத்தில் மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு வேலியில் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் டானி குரியனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது கேரள மாநிலம் ஆனைப்பாறை பகுதியிலிருந்து வந்த 108 ஆம்புல்ன்ஸ் மூலம் அவா் ஆனைப்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவிக்குப் பின்னா் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதே ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டாா். வேகமாக சென்ற ஆம்புலன்ஸ், பனச்சமூடு அருகே எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து, மேலும் இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் மோதி கவிழ்ந்தது. இதில் டானி குரியன், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் நந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வேறு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அனைவரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி டானி குரியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகப் பகுதியில் கேரளம் சாா்பில் குப்பை சேகரிப்புக் கூண்டு! சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் ஊராட்சிப் பகுதியில் கேரளத்தின் உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் குப்பை சேகரிப்புக் கூண்டு வைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகளை உடனே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன.இவ்ஊராட்சியின் முக... மேலும் பார்க்க

இரணியலில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

இரணியலில் சனிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ரபல் (30). கட்டடத் தொழிலாளியான இவா், கண்டன்விளை பகுதியில் வாடகை வீட்டில் வசித... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விதிமீறல்: 20 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் விதிமுறைமீறி இயக்கப்பட்ட 20 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆா்.ஸ்டாலின் உத்தரவுப்படி, டிஎஸ்பி பி. மகேஷ் குமாா், கன்னியாகுமரி போக்குவரத்... மேலும் பார்க்க

பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூா் காற்றாடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பால் (70). தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலை அப்பகுத... மேலும் பார்க்க

சுசீந்திரம் கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணி!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.... மேலும் பார்க்க