செய்திகள் :

ஆம் ஆத்மி எம்.பி.யின் ராஜிநாமா ஏற்பு!

post image

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோராவின் ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார்.

பஞ்சாப் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சீவ் அரோரா, லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசியலமைப்பின் பிரிவு 101 3(பி)யின்படி, அவரது ராஜிநாமாவை ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் மாநிலத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajya Sabha Chairman and Vice President Jagdeep Dhankhar has accepted the resignation of Aam Aadmi Party Rajya Sabha member Sanjeev Arora.

இதையும் படிக்க : கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி ஜிஎஸ்டி: ராகுல் காந்தி!

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: இருவருக்கு ஜாமீன்!

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.மேலும், ஊடகங்களில் பேட்டி அளிக்கக் கூடாது, சம... மேலும் பார்க்க

கொல்கத்தா சட்டக் கல்லூரியின் கதையையே மாற்றிய மோனோஜித்! அபாயப் பகுதியாக..

கொல்கத்தா: கொல்கத்தா சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மோனோஜித் மிஸ்ரா பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாக... மேலும் பார்க்க

திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லியில் அதிர்ச்சி!

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி அமிலம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்ற... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் பின்விளைவுகள் காரணமாக திடீர் உயிரிழப... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!

‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள... மேலும் பார்க்க

தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்

நமது நிருபா்பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு தில்லியில் எரிபொருள் வழங்குவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. முதல் நாளில் 80 பழைய வாகனங்கள் பறிமுதல் செ... மேலும் பார்க்க