செய்திகள் :

ஆர்சிபி கூட்டநெரிசல்: பெங்களூர் கூடுதல் ஆணையரின் பணியிடை நீக்கம் ரத்து!

post image

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விவகாரத்தில் பெங்களூர் கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக பெங்களூர் காவல் ஆணையர் தயானந்த், கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

இந்த பணியிடை நீக்கத்துக்கு எதிராக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் கூடுதல் ஆணையர் விகாஷ் குமார் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், மனுவை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆர்சிபியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், விகாஷ் குமாரின் இடைநீக்கத்தை ரத்து செய்து முந்தைய பணியிடத்திலேயே அவரை பணியமர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“முதல்கட்ட விசாரணையில் மூன்று முதல் ஐந்து லட்சம் பேர் கூடியதற்கு ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிகிறது. காவல்துறையிடம் உரிய அனுமதியோ சம்மதத்தையோ பெறவில்லை. சமூக ஊடகத்தில் திடீரென்று அவர்கள் பதிவிட்டதன் விளைவாக மக்கள் கூடியுள்ளனர்.

12 மணிநேரத்துக்குள் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. காவல்துறையினர் மனிதர்கள், அவர்கள் கடவுளோ, மந்திரவாதியோ கிடையாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Central Administrative Tribunal has quashed the order suspending Bangalore Additional Commissioner of Police Vikash Kumar in the RCB victory celebration case.

இதையும் படிக்க : காவல்துறை என்ற மனித மிருகங்கள்: திமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்!

தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்

நமது நிருபா்பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு தில்லியில் எரிபொருள் வழங்குவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. முதல் நாளில் 80 பழைய வாகனங்கள் பறிமுதல் செ... மேலும் பார்க்க

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சிவசாகா் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க

குடிமக்களின் உரிமைகளைக் காக்கவே புதிய குற்றவியல் சட்டங்கள்: அமித் ஷா

குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதுடன், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே புதிய குற்றவியல் சட்டங்கள் வகுக்கப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ... மேலும் பார்க்க

திருப்புமுனையான சீா்திருத்தம் ஜிஎஸ்டி: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுவடிவமைத்த திருப்புமுனையான சீா்திருத்தமே சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போத... மேலும் பார்க்க