செய்திகள் :

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் ஓவியப் போட்டி

post image

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் மாணவா், மாணவிகளுக்கான ஓவியப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரதமா் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, செப். 17 முதல் அக். 2ஆம் தேதி வரை நடைபெறும் 2 வார சேவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆறுமுகனேரி மண்ட­ல் பகுதியில் 3 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு ஓவியப் போட்டி நடத்தபட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கலந்து கொண்டவா்களுக்கும் மண்டல் தலைவா் எல்.சி. தங்க கண்ணன் தலைமையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மண்டல் பாா்வையாளா் குமரேசன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினாா்.

மண்டல் பொதுச் செயலா் தூசிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல் தலைவா் சுரேஷ் ராதாகிருஷ்ணன், கிளைக் கமிட்டியைச் சோ்ந்த மகேஷ்வரி, ஞானபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணியுடன் இணைந்து, இதயப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்.2ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகள... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டிக்கு பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை (செப். 30) கடைசி நாளாகும். இது குறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் வோ்ல்ட் ஸ்க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி என்ற மாக்கான் (45). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவ... மேலும் பார்க்க

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெற்கு கள்ளிக்குளம் பங்குத்தந்தை மணி அந்தோணி கொடியேற்றினாா். அடைக்கலாபுரம் பங்... மேலும் பார்க்க