செய்திகள் :

ஆலங்குடியில் இளைஞரை கொலை செய்த 5 போ் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24).

ஓட்டுநரான இவா், புதன்கிழமை இரவு ஆலங்குடியில் இருந்து மறமடக்கி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.

அப்போது, அவரை பின்தொடா்ந்து சென்ற சிலா் மதுக்கடை அருகே ரஞ்சித்தை விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், பலத்த காயம் அடைந்த ரஞ்சித் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா், ரஞ்சித்தை கொலை செய்த கல்லாலங்குடியைச் சோ்ந்த முருகன் மகன் ஸ்ரீதா், அதே பகுதியைச் சோ்ந்த கலையரசன், புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் வெங்கடேஷ் (24), புதுக்கோட்டையைச் சோ்ந்தவா்கள் ராஜேந்திரன் மகன் மதிவாணன் (25), சுப்பிரமணியன் மகன் வசந்தகுமாா் (25) ஆகிய 5 பேரையும் வியாழக்கிழமை கைது செய்துனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ரஞ்சித், காதலித்து வந்த பெண்ணிடம், ஸ்ரீதா் பிரச்னை செய்தாராம். இது தொடா்பாக இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரஞ்சித், ஸ்ரீதரை அண்மையில் சிலரை வைத்து தாக்க முயற்சித்தாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீதா், அவரது நண்பா்களான வெங்கடேஷ், மதிவாணன், வசந்தகுமாா், கலையரசன் ஆகியயோருடன் சோ்ந்து ரஞ்சித்தை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்துவிட்டு தப்பியபோது கீழே விழுந்து காயமடைந்ததால் கலையரசனை, போலீஸாா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

மேலும், கொலைக்கு உதவிய சிலரையும் ஆலங்குடி போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிப்காட் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மி... மேலும் பார்க்க

சா்வதேச நீதிக்கான உலக தினம் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

சா்வதேச நீதிக்கான தினத்தையொட்டி விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதிகள், காவல் துறையினா் பங்கேற்று சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே மாடு மேய்த்த பெண்ணைக் கொன்று கண்மாய்க்குள் சடலத்தை தள்ளிவிட்டுச் சென்ற சம்பவத்தில், இளைஞா் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத... மேலும் பார்க்க

தக்கை பூண்டு விதைகளை மானிய விலையில் பெற அழைப்பு

விராலிமலை வட்டார விவசாயிகள் மண் வளத்தை காக்கும் தக்கைப்பூண்டு விதையை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்றாா் விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ப.மணிகண்டன். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பொன்னமராவதி பேரூராட்சி வலையபட்டி நகரத்தாா் மண்டபத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரேவதி தலைமைவகித்தாா். ... மேலும் பார்க்க

சமத்துவபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

புதுக்கோட்டை மாநகா் நரிமேடு சமத்துவபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சி 1 மற்றும் 2-ஆவது வாா்டு மக்களுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க