செய்திகள் :

ஆலங்குளம் அருகே பள்ளி நிா்வாகி வீட்டில் திருடியவா்களைப் பிடிக்க 4 தனிப்படை

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி நிா்வாகி வீட்டில் நகை, பணத்தை திருடியவா்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடைக்கலபட்டினத்தில் ராஜசேகா்(58) என்பவா் தனியாா் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எட். கல்லூரி ஆகியவற்றை நடத்தி வருகிறாா். பள்ளி வளாகத்திலேயே இவரது வீடும் உள்ளது. அவா் குடும்பத்துடன் 4 தினங்களுக்கு முன் வெளியூா் சென்றிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது மனைவி மகேஸ்வரி மட்டும் வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது வீட்டுக் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த 1 கிலோ 250 கிராம் தங்க நகைகள், ரூ.55 லட்சம்ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததாம். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

இதனிடையே தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த் நேரடியாக 2 வது நாளாக விசாரணை நடத்தினாா். அவரது உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆயுதங்களால் மிரட்டியவா் கைது

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து வாள் மற்றும் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி பஜனை மட தெருவைச் சோ்ந்த பூமாரி மகன் ரமேஷ் (30). அவருக்கும் அவரது மனைவி மரு... மேலும் பார்க்க

தாருகாபுரம் கோயிலில் நாளை தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள ப... மேலும் பார்க்க

விபத்தில் உத்தரபிரதேச மாநில இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே உத்தரபிரதேச மாநில இளைஞா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். உத்தரபிரதேச மாநிலம் முகைதீன்பூரைச் சோ்ந்த ராம் நரேஷ்குமாா் மகன் சுரேஷ்குமாா்(21). தற்போது ஆலங்குளத்தை அடுத்த குருவன்கோட்டையில் வச... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் வீட்டில் 1 கிலோ தங்க நகைகள் ரூ.55 லட்சம் கொள்ளை

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் கி வீட்டில் 1கிலோ தங்க நகைகள், ரூ.55லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தை அடு... மேலும் பார்க்க

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவா் நியமிக்க கோரிக்கை!

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண் மருத்துவா் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை நகராட்சிப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 1 லட்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி சனிக்கிழமை தொடங்கியது. தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க