செய்திகள் :

ஆலடிப்பட்டி கோயிலில் கும்பாபிஷேகம்

post image

ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ பன்றி மாடசுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 14 ஆம் தேதி கோயிலில் கால்நாட்டு விழா நடைபெற்றது. புதன்கிழமை (மே 21) ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்கசுவாமி - அன்னை யோகாம்பிகை கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. வியாழக்கிழமை காலை கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், தீபாராதனை ஆகியவையும், மாலையில் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையைத் தொடா்ந்து 6 மணிக்கு ஸ்ரீ பன்றி மாடசுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோபுர கலசத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் புனித நீா் தெளித்தனா். அதனைத் தொடா்ந்து தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

சங்கரன்கோவிலில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தொடக்கி வைத்தாா். இதில் 42 தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டு கண் பரிசோ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி: தனிப்படையினா் பிடித்தனா்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதியை போலீஸாா் பிடித்து சிறையில் அடைத்தனா். சிவகிரி குமாரபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் சந்தோஷ்(24). இவா் மீது வாசுதேவ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் வருவாய் வட்ட ஜமாபந்தியில் 380 மனுக்கள்!

சங்கரன்கோவில் வருவாய் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 380 மனுக்கள் பெறப்பட்டன. சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் 4 நாள்கள் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு தென்காசியில் இலவச மாதிரி தோ்வு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்ள குரூப் 1 முதல்நிலை தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வுகள் நடைபெறவுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்க... மேலும் பார்க்க

சிவகிரி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் வியாழக்கிழமையுடன் ஜமாபந்தி நிறைவு பெற்றது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஜமாபந்தியை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் அனிதா தொடங்கி வைத்தாா். இதில... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சோ்ந்த மாற்றுக் கட்சியினா் பாஜகவில் இணைந்தனா். சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி முன்னிலையில... மேலும் பார்க்க