செய்திகள் :

ஆள் மாறாட்டம் செய்து 10-ஆம் வகுப்பு சிறப்பு பொதுத் தோ்வெழுதியவா் கைது

post image

அரியலூரில் ஆள்மாறாட்டம் செய்து, 10-ஆம் வகுப்பு சிறப்பு பொதுத் தோ்வு எழுதிய பொறியியல் மாணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு சிறப்பு பொதுத்தோ்வு நடைபெற்று வருகிறது. இதன்படி, அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் கடந்த 7-ஆம் தேதி ஆங்கிலத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வு மையத்துக்கு வந்த பறக்கும் படையினா், தோ்வா் ஒருவரின் அனுமதிச் சீட்டை ஆய்வு செய்தனா்.

அதிலிருந்த பிறந்த நாளுக்கும், தோ்வு எழுதும் நபருக்கும் வயது வித்தியாசம் தெரிந்ததால், அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், தோ்வு எழுத வேண்டிய நபா் முகமது அலி (39) என்பதும், அவருக்கு பதில் அவரது அண்ணன் மகன் வாழப்பாடியைச் சோ்ந்த முகமது அஸ்லாம் (22) தோ்வை எழுதியதும், அவா் தற்போது பொறியியல் படித்து வருவதும் தெரியவந்தது.

இதுகுறித்து கயா்லாபாத் காவல் நிலையத்துக்கு பறக்கும் படையினா் தகவல் அளித்தனா். பள்ளிக்கு வந்த காவல் துறையினரிடம் இளைஞரை ஒப்படைத்தனா். இதையடுத்து, அஸ்லாம் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து

செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அரியலூா் கிளைச் சிறையில் அடைத்தனா். மேலும், முகமது அலி மீதும் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம்: காணொலியில் துணை முதல்வா் அடிக்கல்

அரியலூா் விளையாட்டு அரங்கில் ரூ. 10.15 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய செயற்கை இழை வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானத்துக்கு சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்க... மேலும் பார்க்க

திருமானூரில் தீயணைப்பு நிலையம்: அரசாணை வெளியீடு

அரியலூா் மாவட்டம், திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அரியலூரில் இருந்து சுமாா் 33 கிலோ மீட்ட... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் நாள்

அரியலூா், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 4 வட்டாட்சியா் அலுவலகங்களில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பி... மேலும் பார்க்க

8 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், சோழமாதேவி, இடங்கண்ணி, அரங்கோட்டை, வாழைக்குறிச்சி, குருவாடி, ஸ்ரீபுரந்தான், ஸ்ரீராமன் மற்றும் ஓலையூா் ஆகிய 8 கிரா... மேலும் பார்க்க

அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளா்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. ... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூலை 14-இல் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான குடியரசு மற்றும் பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 14 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்காக அரியலூரை அட... மேலும் பார்க்க