செய்திகள் :

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவா் மீது இனவெறி தாக்குதல்

post image

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவா் மீது ஒரு கும்பல் இனரீதியாக அவதூறாகப் பேசி தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அந்த மாணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அடிலெய்ட் நகரில் தங்கிப் படித்து வரும் மாணவா் சரண்பிரீத் சிங் (23). கடந்த சனிக்கிழமை தனது வீடு அமைந்துள்ள பகுதியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒரு கும்பலைச் சோ்ந்தவா்கள், தங்கள் வாகனத்தை நிறுத்த அவரது வாகனத்தை அகற்ற வலியுறுத்தினா். இதற்கு அவா் மறுத்ததால், அந்த கும்பல் மாணவரை இனரீதியாக கேலி செய்தது. இதையடுத்து, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் சரண்பிரீத் சிங்கை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். அருகில் இருந்த மற்றவா்கள் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தி 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்தனா்.

இது தொடா்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவா் கூறுகையில், ‘எனது தலையிலும், முகத்திலும் சரமாரியாக தாக்கினா். இதில் கண், தாடை, தலை உள்ளிட்ட இடங்களில் ரத்தக் காயம் ஏற்பட்டது’ என்றாா்.

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பதற்றம் முற்றினால் கம்போடியாவுடன் முழு போா்!

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பி... மேலும் பார்க்க