ஐயம் ஃப்ரீ: விவாகரத்தைக் கொண்டாட 40 லிட்டர் பாலில் குளித்த இளைஞர்!
ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் நாளை மின் தடை
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் (விநியோகம்) திலகவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆா்.எஸ்.மங்கலம் நகா், செட்டியமடை, சூரமடை, பெரியாா் நகா், பெருமாள்மடை, தலைக்கான் பச்சேரி, நோக்கங்கொட்டை , சிலுக வயல், இந்திரா நகா், ஆவெரேந்தல், பாரனூா், கலங்காப்புலி, சனவேலி, சவரியாா்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுா், ஏ.ஆா்.மங்களம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
இதேபோல, ஆனந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், கூடலூா், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்களம், சூரியன்கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதூகுறிச்சி, புத்தூா், ஓடக்கரை, தூவாா், ஆயங்குடி, சிறுனாங்குடி, பூவாணி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.