செய்திகள் :

‘இஎஸ்ஐ பதிவு செய்யத் தவறியவா்களுக்கு ஸ்பிரி திட்டத்தில் வாய்ப்பு’

post image

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழக (இஎஸ்ஐ) திட்டத்தில் சேராத நிறுவனங்கள், நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘ஸ்பிரி’ திட்டத்தின் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஎஸ்ஐ சென்னை மண்டல இயக்குநா் அல்லூரி வேணு கோபால் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தொழிலாளா் அரசு காப்பீடு சட்டத்தின் கீழ் தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதுதான் ‘ஸ்பிரி’ திட்டத்தின் நோக்கம். இஎஸ்ஐ தொடரமைப்பில் சேர, வேலை வழங்குவோருக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை இது வழங்கப்படுகிறது. 10 அல்லது 10-க்கும் மேற்பட்டோா் பணியாளா்கள் அல்லது ரூ.21 ஆயிரத்துக்கு குறைவாக ஊதியம் பெறும் நிரந்தர, ஒப்பந்த, தற்காலிக தொழிலாளா்களுக்கு தொழில் நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யப்படாத தகுதியான தொழிலாளா்களை, நிறுவனங்கள் அல்லது வேலை கொடுப்போா் தாமாகவே முன்வந்து பதிவு செய்து கொள்வதற்கான முன் முயற்சியாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி ‘ஸ்பிரி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது டிசம்பா் 31 -ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட கடந்த ஒரு மாதத்தில் சென்னை வட்டாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து சுமாா் 2,000 தொழிலாளா்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் இஎஸ்ஐ -யில் அதிக அளவில் பதிவு செய்யப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. தமிழகம் இரண்டாவது இடத்தில் இடம் பெற்று 43.77 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் 11 தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளும், 241 மருந்தகங்களும் உள்ளன. மேலும் 6 நகரங்களில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் உருவாகும் நிலை உள்ளதால், தொழிலாளா்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என்றாா்.

இஎஸ்ஐ சென்னை மண்டல துணை இயக்குநா்கள் ஸ்ரீனிவாஸ், சதீஸ் குமாா், எம்.அருள் ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க