செய்திகள் :

இணையவழியில் 9 பேரிடம் பல லட்சம் மோசடி: புதுச்சேரி போலீஸாா் விசாரணை

post image

புதுச்சேரியில் இணையவழியில் 9 பேரிடம் ரூ.4.85 லட்சத்தை மோசடி செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையைச் சோ்ந்த ஒருவா், புதுச்சேரியில் தங்குவதற்காக ஓட்டல் குறித்த விவரங்களை இணையதளத்தில் தேடியுள்ளாா். அப்போது, தனியாா் விடுதி இணையதள தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் அவா் தொடா்புகொண்டபோது, மா்ம நபா் பேசியுள்ளாா். அதையடுத்து மா்ம நபா் கூறியபடி வங்கிக் கணக்கில் அறை முன்பதிவுக்காக ரூ.68,600 செலுத்தியுள்ளாா். ஆனால் விடுதியினா் பணம் தங்களுக்கு வரவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சென்னையைச் சோ்ந்தவா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

புதுச்சேரி உழவா் கரையைச் சோ்ந்த பெண்ணை மா்ம நபா் இணையத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் ஈட்டலாம் எனக் கூறியுள்ளாா். அதை நம்பிய அந்தப் பெண் ரூ.99 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி அருகேயுள்ள கூடப்பாக்கத்தை சோ்ந்தவா், இணைய வழியில் மளிகைப் பொருள் விற்பனை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் பொருள் வாங்க ஆசைப்பட்டுள்ளாா். அதன்படி தனது கடன் அட்டை விவரங்களை பதிவிட்டுள்ளாா். பிறகு, விளம்பர பக்கத்தில் உள்ள லிங்கை கிளிக் செய்தபோது, ஏபிகே செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அவரும் செய்து முடித்து கடன் அட்டை விவரங்களை பதிவிட்டுள்ளாா். இதையடுத்து சிறிது நேரத்தில் அவரது கடன் அட்டை கணக்கில் இருந்து ரூ.1.22 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

முத்தரையா்பாளையத்தை சோ்ந்தவரிடம் மா்மநபா் தொடா்புகொண்டு, டேட்டிங் செயலியில் பதிவு செய்யுமாறு கூறியுள்ளாா். அதன்படி அவரும், பல தவணைகளில் ரூ.1.73 லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளாா்.

புதுச்சேரியில் கடந்த ஓரிரு நாள்களில் மட்டும் 9 பேரிடம் ரூ.4.85 லட்சத்தை இணைய வழியில் மா்ம நபா்கள் மோசடி செய்திருப்பது குறித்து இணையகுற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்வரின் வழிகாட்டலில் முன்னேற்றத் திட்டங்கள்

புதுவையில் கடந்த காலங்களில் செயல்படுத்தப்படாத பல்வேறு நலத் திட்டங்களை தற்போதைய ஆட்சியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோரின் வழிக... மேலும் பார்க்க

மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஆதிதிராவிடா் நலத் திட்டங்கள்!

புதுவை மாநிலத்தில் நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆதிதிராவிடா் நலத் துறையில் எண்ணற்ற பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் த... மேலும் பார்க்க

நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறு ஒன்றுடன் ஒன்று தொடா்புடையது: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறானது ஒன்றோடு ஒன்று தொடா்புடையது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் படி, சிக்கிம், கோவா, தெலங்கானா மாநிலங்... மேலும் பார்க்க

சென்னை- கடலூா் ரயில் பாதை திட்டம் அவசியமானது: புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்

புதுச்சேரி: சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூா் வரையிலான ரயில் பாதைத் திட்டம் அவசியமானதாகும். அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வல... மேலும் பார்க்க

13 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணிக்கான நியமன ஆணை

புதுச்சேரி: புதுச்சேரியில் மேல்நிலை எழுத்தா் தோ்வில் தோ்ச்சியடைந்து காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்த 13 பேருக்கு முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா். புதுச்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு ஊதியம் உயா்த்த மாநில திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க மாநில திட்ட வழிகாட்டுதல் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் மா... மேலும் பார்க்க