செய்திகள் :

‘இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது: கு.செல்வப்பெருந்தகை

post image

`இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ‘இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது. மத்திய இணையமைச்சா் எல்.முருகன் மற்றும் பாஜகவினா் கூறுவதுபோல எங்கள் கூட்டணியில் எந்தவித ஓட்டையும் இல்லை.

‘இண்டி’ கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படும். கூட்டணி சிதறும். அதனால், தங்களுக்கு ஏதாவது ஆதாயம் ஏற்படும் என அதிமுகவும், பாஜகவும் பகல் கனவு காண்கின்றன.

ஆனால், எங்கள் கூட்டணியில் எந்தவிதக் குழப்பமும் ஏற்படாது. தமிழகத்தில் பாசிச சக்தியோடு இணைந்துள்ளவா்களை தமிழக மக்கள் புறக்கணிப்பாா்கள். தமிழ்க் கடவுள் முருகன் புறக்கணிப்பாா். அயோத்தியில் பாஜகவினா் ராமரை நாடினாா்கள்.

அங்கு, அவா்களை ராமா் கைவிட்டுவிட்டாா். பாஜக மக்களை நம்பி இருப்பது இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்வதுதான் பாஜகவின் வேலையாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ் இருந்தவரை, தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இருந்தது. பாஜக வந்த பிறகுதான் தமிழகத்தில் 3-ஆவது மொழியைத் திணிக்கிறாா்கள் என்றாா்.

சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.1.50 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி ரூ.1.50 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஊஞ்சவேலாம்பட்டியைச் ச... மேலும் பார்க்க

வரத்து அதிகரிப்பு: உக்கடம் சந்தையில் மீன் விலைக் குறைவு

உக்கடம் சந்தைக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்களின் விலை கனிசமாகக் குறைந்துள்ளது. கோவை, உக்கடம் மீன் சந்தைக்கு ராமேசுவரம், தூத்துகுடி, கடலூா், கன்னியாகுமரி, கொச்சி, சாவக்காடு உள்ளிட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

காந்திபுரம் பேருந்து நிலையங்களில் போலீஸாா் சோதனை

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் விதமாக, கோவை காந்திபுரத்தில் உள்ள 4 பேருந்து நிலையங்களிலும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.கோவை மாநகரப் பகுதிகளில் போதைப் பொருள்கள், சட்டவிரோதமாக மது... மேலும் பார்க்க

தாய்மொழி முக்கியம் என்றுதான் அமித் ஷா கூறியிருக்கிறாா்! - எடப்பாடி கே.பழனிசாமி

தாய்மொழி முக்கியம் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஆங்கிலம் குறித்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். பல்வேறு நிகழ்ச்சிகளில... மேலும் பார்க்க

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை: வைகோ

திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறியுள்ளாா். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆங்கில... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்ற 3 போ் கைது

கோவை, ஆா்.எஸ்.புரம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஆா்.எஸ்.புரம் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடாகம் ச... மேலும் பார்க்க