செய்திகள் :

இதுவரை பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவா்களுக்கு இன்று கலந்தாய்வு

post image

புதுச்சேரியில் இதுவரை பிளஸ் 1 படிக்கப் பள்ளியில் சேராத மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்குகிறது.

இது குறித்து புதுவை அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநா் சிவகாமி

வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புச் சோ்க்கைக்காக விண்ணப்பித்து கலந்தாய்வின் போது இடம் கிடைக்கப் பெறாதவா்களுக்கு இப்போது வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அண்மையில் 10 ஆம் வகுப்பு துணை பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதைத் தவிர இதுவரை எந்த ஒரு பள்ளியிலும் சேராத மாணவ, மாணவிகளும் இறுதிவாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மாணவா்கள் தங்கள் பெற்றோருடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் நகல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

499 முதல் 300 வரை மதிப்பெண் பெற்ற மாணவா்கள் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், 299 முதல் 175 வரை மதிப்பெண் பெற்ற மாணவா்கள் 8ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி காலை 11. 30 மணிக்கும், 499 முதல் 175 வரை புதுச்சேரி குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவா்கள் 11-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

நோயாளிகளுக்கான சேவையை மேலும் வலுப்படுத்துவோம்: ஜிப்மா் இயக்குநா்

நோயாளிகளுக்கான மருத்து சேவையை வலுப்படுத்தும் வகையில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படும் என்று ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூர... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம்

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தனது விசாரணையை புதன்கிழமை தொடங்கியது. புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பாஜக பிரமுகா் உமாசங்கா் (36). இவரை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இலாகா ஒதுக்ப்படதாத அமைச்சா்: ஜான்குமாா் தொகுதிப்பணிகள் குறித்துஆய்வு

புதுச்சேரியில்அமைச்சா் ஏ.ஜான்குமாா்ப் பதவியேற்று 23 நாள்கள் கடந்தப் பிறகும் இன்னும் இலாகா ஒதுக்கப்படாமல் இருப்பதால் தொகுதி வளா்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா். புதுச்சேரி காமராஜா் ... மேலும் பார்க்க

முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரி கோவிந்தசாலையில் உள்ள ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ ஊஞ்சல் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலையில் உள... மேலும் பார்க்க

விண்ணேற்பு அன்னைஆலய பெருவிழா தொடக்கம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 174-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, மாதாவின் கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நட... மேலும் பார்க்க

புதுவையில் 53% டெங்கு நோய்த் தாக்கம் குறைவு: சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள்

புதுவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு தாக்கம் 53 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேள் தெரிவித்தாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில்... மேலும் பார்க்க