செய்திகள் :

'இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்' - சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகள்; காரணம் என்ன?

post image

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின் படி, 2023-24 ஆண்டில், இந்தியளவில் தமிழ்நாட்டில் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் என்பது இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் குறித்த தரவுகளை பதிவு செய்யும் ஒரு தரவுத்தளம் ஆகும்.

கடந்த ஆண்டில் இருந்து, இந்தத் தரவுத்தளத்தில், நேரம், எப்படிப்பட்ட விபத்து, எதனால் விபத்து போன்ற 15 விஷயங்களை குறிப்பிட்டு, சாலை விபத்து குறித்த தகவல்கள் பதியப்படுகின்றன. 'அப்போது தான் சாலை விபத்தின் முக்கிய காரணத்தை கண்டுபிடித்து, அதை தடுக்க முடியும்' என்பது திட்டம்.

விபத்தை தடுக்க 'இந்தத்' தரவுத்தளம்
விபத்தை தடுக்க 'இந்தத்' தரவுத்தளம்

அப்படி பதியப்பட்டதில் இருந்து தான், இந்தியளவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் ஏற்படும் விபத்து தமிழ்நாட்டில் தான் அதிகம் ஏற்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோருக்கு சிறையும், அபராதமும்...

2022-ம் ஆண்டு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டர் வாகன வழிகாட்டுதல்களின் படி, 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் வாகனம் ஓட்டி எதாவது விபத்து நேர்ந்தால், அவர்களது பெற்றோர்கள் மூன்று ஆண்டு சிறையும், ரூ.25,000 அபராதத்தையும் ஏற்க வேண்டும்.

ஆனால், இந்த நடைமுறை கடுமையாக செயல்படுத்தப்படுவதில்லை என்பது இந்த விபத்து அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

மேலும், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், பெரும்பாலும் அபராதம், எச்சரிக்கை, பெற்றோரிடம் தகவலை தெரிவிப்பது என்பதுடனே போலீஸார் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிடுகின்றன. வாகனங்களை பறிமுதல் செய்வதில்லை.

லேர்னர் லைசன்ஸ்

இன்னொரு பக்கம், லேர்னர் லைசன்ஸ் 16 - 18 வயதிலேயே கிடைத்துவிடுகிறது. இதை வைத்துகொண்டு பலர் தப்பித்து விடுகின்றனர். இந்த விபத்துகளை கட்டுபடுத்த இந்த வயதினையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

புதுக்கோட்டையில் மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி (வயது 37).இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தவபாலன் (வயது 12) என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் செல்போன் பறித்த மூவர்

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அவரின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்த அந்த சிறுவன் தன் தந்தையை அதில் ஏற்றி விட்டுள்ளார். ஆம்புலன்... மேலும் பார்க்க

தலையில் அரிவாளால் வெட்டி சென்னை வழக்கறிஞர் படுகொலை

சென்னை விருகம்பாக்கம், கணபதி ராஜ் நகர் மெயின் ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.உடனடியாக போலீஸார்... மேலும் பார்க்க

``மீரட்டில் நடந்த கொலையைப் போல..'' - காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டிய மனைவி; உ.பி.,யில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் புதுக்காதலன் உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் காதல் கணவனை புதுக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து டிரம்மில் அடைத்... மேலும் பார்க்க

வயிற்று வலி; ஏர்போர்ட் கழிவறைக்கு சென்று குழந்தைபெற்று குப்பை தொட்டியில் போட்ட கல்லூரி மாணவி

மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் கிடந்தது. அதனை பார்த்த துப்புரவு தொழிலாளி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பிறந்தவுடன் குழந்தை ... மேலும் பார்க்க

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க