செய்திகள் :

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!

post image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவிலோ வேறு நாடுகளிலோ தயாரிக்கப்படும் ஐபோன்கள், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவதை விரும்பவில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவையாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் - ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்தார். டிம் இவ்வாறு அறிவித்த சில நாள்களிலேயே, இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

கத்தார் தலைநகர் தோஹாவில், மே 15 ஆம் தேதியில் நடைபெற்ற வணிக மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், அமெரிக்க பொருள்களுக்கான வரியை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசியதாவது, ''இந்தியா மிக அதிக அளவில் இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று. இருப்பினும், இந்தியா எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர். அதில், எங்கள் பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை'' என டிம்மிடம் கூறியதாக டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், டிரம்ப்பின் வலியுறுத்தலை டிம் குக் கண்டுகொண்டதுபோலத் தெரியவில்லை.

பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் ... மேலும் பார்க்க

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.சமீபத்தில் முடிவடைந்த மகளிர் ப... மேலும் பார்க்க

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகி... மேலும் பார்க்க

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க