செய்திகள் :

இந்தியாவில் 257 பேருக்கு கரோனா! தமிழகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பாதிப்பு!

post image

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தற்போது சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவிலும் கரோனா பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவில் 257 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கூறியுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு லேசான பாதிப்புதான் இருப்பதாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் கரோனா பாதிப்பு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளம்(69), மஹாராஷ்டிரத்திலும்(44) கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் ஓமிக்ரான் BA.2.86-இன் புதிய வகையான ஜேஎன். 1(JN.1) வைரஸ்தான் தற்போது அதிகம் பரவி வருகிறது. காய்ச்சல், தொண்டைப்புண், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வறட்டு இருமல், சோர்வு, தலைவலி, சுவைத் தன்மையை இழத்தல், தசை வலி, கண் சிவத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த ஜேஎன். 1 வகை வைரஸில் LF.7, NB.1.8 உள்பட 30 வகைகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இதையும் படிக்க | காட்டன் பட்ஸ்களைப் பயன்படுத்தலாமா? குறட்டை நல்லதா? - நம்பிக்கையும் உண்மையும்!

ம.பி. உயா்நீதிமன்ற நீதிபதி ஓய்வு: கடைசி பணி நாளில் உச்சநீதிமன்றம் மீது அதிருப்தி

இந்தூா், மே 20: மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி துப்பல வெங்கட ரமணா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். தனது கடைசி பணி நாளில் மிகுந்த வேதனையுடன் உச்சநீதிமன்றம் மீது அவா் அதிருப்தி தெரிவித்தாா். மத்திய பி... மேலும் பார்க்க

வரவேற்பு நடைமுறை குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்

மகாராஷ்டிரத்தில் தன்னை வரவேற்பதற்கான நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தியுள்ளாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற... மேலும் பார்க்க

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க

மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்? கார்கே

11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டதைபோன்று உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடகத்தின் கடல் பகுதியில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகக் கூடும் எனக் கூறப்பட... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்... மேலும் பார்க்க