செய்திகள் :

இந்தியாவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

post image

‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னா், பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இருதரப்பு வா்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, 191 பில்லியன் டாலா் மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்குக்கு அதிகமாக 500 பில்லியன் டாலா் மதிப்பில் உயா்த்த இருதரப்பிலும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுதொடா்பான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த மாா்ச் மாதம் முதல் மேற்கொண்டு வருகின்றன.

இந்த வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அதிகாரபூா்வ நேரடி பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்பாக, அதற்கான நிபந்தனை நடைமுறைகளை இறுதி செய்வதற்காக மத்திய வா்த்தகத் துறை கூடுதல் செயலா் ராஜேஷ் அகா்வால் தலைமையிலான அதிகாரிகள் குழு அண்மையில் அமெரிக்கா சென்று ஆலோசனை மேற்கொண்டது.

விரைவல் ஒப்பந்தம்: இந்த நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற 100 நாள்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்ட அதிபா் டிரம்ப்பிடம், இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தின் நிலை குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த டிரம்ப், ‘அண்மையில் அமெரிக்கா வந்த இந்திய பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தாா். அதனடிப்படையில், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

முன்னதாக, அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸென்ட் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், துணை அதிபா் ஜே.டிவான்ஸ் கடந்த வாரம் மேற்கொண்ட இந்திய பயணத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்தியா குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது’ என்றாா்.

பரஸ்பர வரி விதிப்பு: அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னா், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டிய டிரம்ப், இந்தியா உள்பட 25 நாடுகள் மீது கடந்த 3-ஆம் தேதி பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தாா். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 26 சதவீத வரியை அறிவித்தாா். இதன் காரணமாக, உலக அளவில் வா்த்தகப் போா் உருவாகும் நிலை எழுந்ததுடன், சா்வதேச பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

இந்தச் சூழலில், சீனாவைத் தவிர, மற்ற நாடுகள் மீது விதித்த பரஸ்பர வரியை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும்; அதே நேரம், அனைத்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்தது. இந்தச் சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் அச்சம்: கராச்சி, லாகூா் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்க... மேலும் பார்க்க

லஷ்கா் பயங்கரவாத தலைவா் ஹபீஸ் சையது பாதுகாப்பு அதிகரிப்பு: பாகிஸ்தான் நடவடிக்கை

இந்தியா மறைமுகமாகத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹபீஸ் சையதுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் சிறப்புப் படையின் முன்னாள் கம... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்தத்தில் அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம், நீண்ட இழுபறிக்குப் பிறகு கையொப்பமாகியுள்ளது. இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்காவு... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகா் நீக்கம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத... மேலும் பார்க்க

இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான ப... மேலும் பார்க்க

டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நி... மேலும் பார்க்க