செய்திகள் :

இந்தியா - ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

post image

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் உரையாடியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ச்சியுடன், இன்று (ஜூன் 27) மதியம் செல்போன் வாயிலாக உரையாடியதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலின்போது, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் குறித்து அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. இத்துடன், அந்நாட்டிலிருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர உதவியதற்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் - ஈரான் இடையில் நடைபெற்ற போரானது நிறுத்தப்படுவதாக, கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்த போர்நிறுத்தத்தை வரவேற்ற இந்திய அரசு, ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அவ்விடங்களில் நிலவும் கதிர்வீச்சுகள் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

India and Iran Foreign Ministers' Dialogue!

இதையும் படிக்க: கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்

ஹிந்தி திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஜூலை 5-இல் கூட்டுப் பேரணி

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாநில முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, அவரின் நெருங்கிய உறவினரான ராஜ் தாக்கரே ஆகியோா் கூட்டாகப் பேரணி மேற்கொள்ள உள்ளனா். கடந்த 2005-ஆம் ஆண்டு கருத்து வேறுப... மேலும் பார்க்க

எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள்: விரைந்து விநியோகிக்க ரஷியாவுக்கு வலியுறுத்தல்

இந்தியாவுக்கான எஸ்-400 டிரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை விரைந்து விநியோகிக்க வேண்டும் என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரே பெலோசோவ் உடனான சந்திப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ரா... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: பலர் காயம்

ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 13 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட்டாக ரூ.22 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 13 நக்சல்கள், காவல் துறையினரிடம் இன்று சரண்டைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், அம்மாநிலத்த... மேலும் பார்க்க

கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்

'கலப்பட' எரிபொருள் காரணமாக ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் பாதுகாப்பு வாகனங்களில் 19 வாகனங்கள் கலப்பட பெட்ரோல் மற... மேலும் பார்க்க

கோவா: சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர் நாடுகடத்தல்!

கோவா மாநில காவல் துறையினர் மேற்கொண்ட ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம் ... மேலும் பார்க்க