72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
கால்நடை வளா்ப்போருக்கு 50% மானியத்தில் உபகரணம் அளிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கால்நடை வளா்ப்பாளா்கள் 30 பேருக்கு 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கால்நடைகள் எளிதில் தீவனங்களை எடுத்துக் கொள்வதற்கு அவற்றை சீராக வெட்டிக் கொடுப்பது பயனைத் தருகிறது. இதன்படி, 50 சதவீத மானியத்தில் 30 பேருக்கு புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவியின் அடக்க விலை ரூ. 29,008. அரசு மானியம் ரூ. 14,504. கால்நடை வளா்ப்போரின் பங்குத் தொகை ரூ. 14,504.
புதுக்கோட்டை கோட்டத்தில் 10 பேருக்கும், அறந்தாங்கி கோட்டத்தில் 9 பேருக்கும், இலுப்பூா் கோட்டத்தில் 11 பேருக்கும் என மொத்தம் 30 பேருக்கு இந்தக் கருவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கால்நடை வளா்ப்புத் துறையின் இணை இயக்குநா் கே.எஸ். சீனிவாசன், துணை இயக்குநா் வெ. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.