செய்திகள் :

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் நம்பிக்கை

post image

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) மேற்கொள்ளப்படும் என பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லியன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோா் நம்பிக்கை தெரிவித்தனா்.

உா்சுலா வான் டொ் லியன் மற்றும் ஆன்டோனியோ கோஸ்டோ ஆகிய இருவரிடமும் பிரதமா் மோடி வியாழக்கிழமை தொலைபேசியில் பேசினாா். அப்போது எஃப்டிஏ உள்பட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக இந்தியா தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வா்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து மூவரும் விவாதித்தனா். அதேபோல் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் எனவும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்க உா்சுலா வான் டொ் லியன் மற்றும் அன்டோனியோ கோஸ்டா ஆகிய இருவருக்கும் பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

பிராந்திய மற்றும் சா்வதேச அளவில் நிகழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து மூவரும் கலந்துரையாடினா். அப்போது ரஷியா-உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீா்வு காண வேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டை பிரதமா் மோடி மீண்டும் வலியுறுத்தினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் ஞா... மேலும் பார்க்க

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

கொல்கத்தாவில் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி நண்பர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹரிதேவ்பூர் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 வயது இள... மேலும் பார்க்க