செய்திகள் :

இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு: கருத்துத் தெரிவிக்க சீன ராணுவம் மறுப்பு

post image

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது.

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ அதிரடி நடவடிக்கைக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் மூண்டது.

எல்லை மாநிலங்களில் ராணுவ நிலைகளைக் குறிவைத்து, பாகிஸ்தான் வீசிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் திறம்பட முறியடிக்கப்பட்டன. மற்றொருபுறம், இந்திய ராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அம்சங்களை சீா்குலைத்து, அந்நாட்டின் விமானப் படைத் தளங்களைத் தாக்கி சேதப்படுத்தின.

நான்கு நாள்கள் நீடித்த மோதல், பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான்-சீனா இடையே ராணுவ ரீதியில் நெருங்கிய உறவு உள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக சீன தயாரிப்பு ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. அதுமட்டுமன்றி, பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயற்கைகோள் ரீதியிலான ஆதரவை சீனா வழங்கியதாகவும், சீன தயாரிப்பு ஆயுத அமைப்புமுறைகள் சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தியப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சீன தயாரிப்பான ‘பிஎல்-15இ’ அதிநவீன ஏவுகணையின் படத்தையும் இந்தியத் தரப்பு வெளியிட்டது.

இந்நிலையில், பெய்ஜிங்கில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாங் ஸியோகாங்கிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால், அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்காத அவா், ‘இருதரப்பும் அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதோடு, நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிா்க்க வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இடையே விரிவான, நீடித்த சண்டை நிறுத்தத்தை எட்டவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடா்ந்து பங்களிக்கவும் சீனா தயாராக உள்ளது’ என்றாா்.

அண்மையில் வெளியான சா்வதேச அறிக்கை தகவலின்படி, பாகிஸ்தானின் பிரதான ஆயுதக் கொள்முதல் நாடாக சீனா உள்ளது. கடந்த 2020 முதல் 2024 வரை 81 சதவீத ஆயுதங்களை சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கொள்முதல் செய்துள்ளது.

எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று... மேலும் பார்க்க

நைஜீரியா வெள்ளம்: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக அதிகரித்துள்ளது.நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த, வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையான மோக்வா நகரம் வெள்ள நீரில் மு... மேலும் பார்க்க

ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு உயா் செறிவு யுரோனியம் குவிப்பு: ஐஏஇஏ

இன்னும் கொஞ்சம் செறிவூட்டினால் அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ த... மேலும் பார்க்க

சீன அச்சுறுத்தலில் இருந்து இந்திய-பசிபிக் நாடுகள் பாதுகாக்கப்படும்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் தெரிவித்தாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

போலந்தில் இன்று இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

போலந்தின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க

இரும்புக்கு 50% கூடுதல் இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது குறித்து பென்சில்வேனியா மாகாணம், பிட்ஸ... மேலும் பார்க்க