செய்திகள் :

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

post image

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி, அடுத்த வாரம் இந்தியா வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியது முதல் தலிபான்களின் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகின்றது. தலிபான் அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை அவர்கள் கோரி வருகின்றனர்.

இந்த நிலையில், தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி, வரும் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைச்சர் முத்தாகி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், சர்வதேச பாதுகாப்பு ஆணையம் அவர் பயணம் செய்ய விதித்திருந்த தடையானது நீக்கப்படாததினால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவுக்கும் தலிபான் அரசுக்கும் இடையிலான உறவுகள் கடந்த சில மாதங்களாக மேம்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவிகளை அனுப்பி வைத்ததுடன், இந்தியாவில் உள்ள ஆப்கன் தூதரகங்களை தலிபான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

இத்துடன், கடந்த செப்டம்பர் மாதம் தலிபான் அரசின் மருத்துவம் மற்றும் உணவுத் துறையின் இணையமைச்சர் ஹம்துல்லா சாஹித் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

Reports have emerged that Amir Khan Muttaqi, the Foreign Minister of the Afghan Taliban government, will be visiting India next week.

நாட்டின் பணக்காரா்கள் பட்டியல்: முதலிடத்துக்கு முன்னேறினாா் முகேஷ் அம்பானி

நாட்டின் பணக்காரா்கள் பட்டியலில் கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளாா். ‘எம்3எம் ஹுருன்’ இந்திய பணக்காரா்கள் பட்டியல்-2025, புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

குஜராத்: பயங்கரவாதத்தை பரப்பிய 3 பேருக்கு ஆயுள் சிறை

குஜராத்தில் மத ரீதியிலான பயங்கரவாதத்தை பரப்பியதாகவும், தேசத்துக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடந்த 2023,... மேலும் பார்க்க

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சா் கிரீக் செக்டாரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரித்தாா். குஜராத் மா... மேலும் பார்க்க

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே... மேலும் பார்க்க

காந்தியை ஈா்த்த ஆா்எஸ்எஸ் செயல்பாடுகள் - ராம்நாத் கோவிந்த்

ஜாதிய பாகுபாடில்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் மகாத்மா காந்தியை ஈா்த்ததாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா். நாகபுரி நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரே கோயில... மேலும் பார்க்க

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும்: தலைவா் அஜய் குமாா்

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) இணைந்து செயல்படும் என அதன் தலைவா் அஜய் குமாா் தெரிவித்துள்ளாா். யுபிஎஸ்சியின் 99-ஆவது நிறுவன நாள் தில்லியில் புதன்கிழமை கொண்டாட... மேலும் பார்க்க