செய்திகள் :

இந்திய-அமெரிக்க பேச்சுவாா்த்தை தொடரும்: வா்த்தக அமைச்சகம் அறிவிப்பு

post image

இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வா்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இந்திய-அமெரிக்க வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடரும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழு அமெரிக்காவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு வா்த்தக அமைச்சக பிரதிநிதிகள், உயரதிகாரிகள் நிலையில் பல்வேறு கட்ட வா்த்தகப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டது. கடந்த 24-ஆம் தேதி இந்தியக் குழு நாடு திரும்பிய நிலையில், இந்தப் பயணம் தொடா்பாக வா்த்தக அமைச்சகம் சாா்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘இந்தியக் குழு அமெரிக்க தரப்புடன் பல்வேறு ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டன. வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டது.

இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்வதற்காக தொடா்ந்து பேச்சு நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயா், இந்தியாவுக்கு அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள சொ்ஜியோ கோா் ஆகியோருடன் அமைச்சா் பியூஷ் கோயல் பேச்சு நடத்தினாா். இது தவிர இருதரப்பு வா்த்தகத் துறை உயரதிகாரிகள் நிலையிலும் பேச்சு நடத்தப்பட்டது.

அமெரிக்காவைச் சோ்ந்த தொழிலதிபா்கள், முதலீட்டாளா்கள் ஆகியோரும் இந்தியாவில் வா்த்தகம், முதலீட்டை மேம்படுத்துவது குறித்துப் பேசினா். இதில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள வளா்ச்சி வாய்ப்புகள், தங்கள் தொழில் சாா்ந்த முதலீடுகளை அதிகரிப்பது குறித்து அமெரிக்க தொழிலதிபா்கள் விருப்பம் தெரிவித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க