செய்திகள் :

இந்திய எல்லைக்கு அருகே திபெத் ரயில் இணைப்பு: சீனா திட்டம்

post image

பெய்ஜிங்: நிகழாண்டு இந்திய எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகே திபெத்துடன் ரயில் இணைப்புத் திட்டத்தை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவின் ஷின்ஜியாங் மாகாணம்-அந்நாட்டு ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் இடையே ரயில் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது சீனாவின் நீண்ட கால திட்டமாகும். ஷின்ஜியாங்கில் உள்ள ஹோடன் பகுதியில் இருந்து திபெத்தில் உள்ள லாசா பகுதி வரை, இந்த ரயில் இணைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

ஷின்ஜியாங்-திபெத் ரயில் இணைப்பு என்பது திபெத்தை சீனாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 4 வழித்தடங்களில் ஒன்றாகும்.

இந்தத் திட்டத்தின் முழு செலவினம் குறித்த விவரம் வெளியாகவில்லை. எனினும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனாவின் சிச்சுவான் மாகாணம்-திபெத் இடையே 1,800 கி.மீ. தொலைவு ரயில் இணைப்பை ஏற்படுத்த 45 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.3.94 லட்சம் கோடி) தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தின் சில பகுதிகள் சீனா-இந்தியா இடையிலான எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகில் செல்லும். நிகழாண்டு இந்த ரயில் இணைப்புத் திட்டத்தை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது என்று ஹாங்காங்கில் உள்ள செளத் சைனா மாா்னிங் போஸ்ட் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே திபெத்தின் லசா பகுதியில் தொடங்கும் அதிவேக ரயில் வழித்தடம் அருணாசல பிரதேச எல்லையையொட்டி செல்கிறது.

இதனிடையே திபெத்தில் பாயும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, உலகின் மிகப் பெரிய அணையைக் கட்டும் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகில் இருக்கும் இடத்தில், அந்தப் பணி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவின் ஒரே ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷியாவின் ஒற்றை ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஒரென்பர்க் பகுதியிலுள்ள, அந்நாட்டின் ஒற்றை ஹீலியம் உற்பத்தி ஆலையின் மீது, நேற்ற... மேலும் பார்க்க

50% வரி.. இந்தியாவை கிண்டலடிப்பதா? கொந்தளித்த இலங்கை எம்.பி.

அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரி விதித்திருப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேச்சு எழுந்தபோது, இந்தியாவை கிண்டலடிப்பதா, நம்முடைய மோசமான நேரத்தில் உதவியதே இந்தியாதான் என எம்.பி. டி சி... மேலும் பார்க்க

டிரம்ப் வரியால்.. அமெரிக்கர்களுக்கு கானல் நீராகுமா காபி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளுடனான வர்த்தகத்துக்கு விதித்து வரும் புதிய வரி விதிப்பு முறையால், வரி விதிப்பை சந்திக்கும் நாடுகளோடு சேர்த்து, அமெரிக்கர்களும்தான் பாதிக்கப்படுவார்கள்.இந்த ... மேலும் பார்க்க

ரஷியாவின் மிக பயங்கர டெட் ஹேண்ட்! மெத்வதேவ் எச்சரித்த அணு ஆயுத அமைப்பு உண்மையா?

ரஷியாவுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதிலடியாக, டெட் ஹேண்ட் எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதத் தாக்கும் அமைப்பு பற்றி முன்னாள் ரஷிய அதிபர் டிமிட்ர... மேலும் பார்க்க

பலூச் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல.. பாகிஸ்தானால் பாதிக்கப்பட்டவர்கள்: மனித உரிமை அர்வலர்கள்!

பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் மஜீத் படைப்பிரிவை பயங்கரவாதக் குழுக்களாக அமெரிக்க அறிவித்துள்ளதற்கு, அந்நாட்டின் மூத்த மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தள... மேலும் பார்க்க

சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்

சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்த... மேலும் பார்க்க