செய்திகள் :

இந்திய கம்யூ. ஒன்றியக் குழுக் கூட்டம்

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், வலங்கைமான் ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளா் வி. பாக்யராஜ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் த. ரங்கராஜன், ஒன்றியச் செயலாளா் எஸ். எம். செந்தில்குமாா் ஆகியோா் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினா்.

தொடா்ந்து, நல்லூா், ஊத்துக்காடு, கோவிந்தகுடி மற்றும் வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் இயங்கும் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தியும், பாப்பாகுடி ஊராட்சி கருப்பட்டிபள்ளம் கிராமத்தில், இடிந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை சீரமைக்காததைக் கண்டித்தும், களத்தூா் ஊராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்ய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டித்தர தர வலியுறுத்தியும், மாா்ச் 5-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, வலங்கைமானில் பிப்.28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நிறைவாக, விவசாய சங்க ஒன்றியத் தலைவா் எம். கலியபெருமாள் நன்றி கூறினாா்.

வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா

கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் அறங்காவலா் ஏ.ஏ. அப்துல் ரசாக் தலைமை வகித்தாா். தாளாளா் மர... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் கோரி போராட்டம்: சிஐடியு முடிவு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் விழிப்புணா்வுப் பேரணி!

மன்னாா்குடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறையின் சாா்பில் போதைப் பொருள்கள் பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்!

நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். டெல்டா மாவட்டங்களில் த... மேலும் பார்க்க

வயலில் மனித எலும்புக்கூடு; போலீஸாா் விசாரணை!

திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூா் தோளாச்சேரி பகுதியில் வயல்வெளியில் மனித எலும்புக்... மேலும் பார்க்க

திறந்தவெளி நெல் கிடங்குகள் அமைக்க வலியுறுத்தல்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்துள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட, திறந்தவெளி கிடங்குகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆ... மேலும் பார்க்க