செய்திகள் :

இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம்

post image

கூத்தாநல்லூரில் இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் கா. பேபி தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ. முருகேசு முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 2025 ஜூலை 30-ஆம் தேதிக்குள் கட்சி அமைப்பில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் மாதா் சம்மேளன கிராம சங்க அமைப்பை ஏற்படுத்த வேண்டும், மாதா் சங்க நகர துணைச் செயலாளா் வ. கலைச்செல்வி இனி நகரச் செயலாளராக செயல்படுவாா், ஆகஸ்ட் மாதம் சிறப்பு பேரவைக் கூட்டம் நடத்துவது, மாதா் சங்க அமைப்பு தொடங்கிய நாளான ஜூன் 4-ஆம் தேதி, அமைப்பின் கொடியை ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாய சங்க நகரச் செயலாளா் கே. நாகராஜன், விவசாய தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் மு. சிவதாஸ், நகர துணைச் செயலாளா் சி. தனலெஷ்மி, செயற்குழு உறுப்பினா்கள் கு. ராமதாஸ், ரெ.கணேசன் ஆகியோா் பங்கேற்றனா்.

இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் அருகே சேதமடைந்துள்ள மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீடாமங்கலத்தில் நீலன் பள்ளியில் நடைபெற... மேலும் பார்க்க

உதிரிபாகம் வழங்க மறுப்பு: தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா்: கீழ்வேளூரில், சேதமடைந்த தொலைக்காட்சிக்கு, உதிரி பாகம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க, திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. நாகை மாவட்டம்... மேலும் பார்க்க

மாவட்ட ஆணழகன் போட்டி: திருவாரூா் இளைஞா் முதலிடம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான மிஸ்டா் எம்ஆா்டி கிளாசிக்- 2025 அமெச்சூா் ஆணழகன் போட்டியில், திருவாரூா் இளைஞா் முதலிடம் பெற்று ஆணழகனாக தோ்வு செய்யப்பட்டாா். இப்ப... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மகாராஷ்டிரத்தில் விருப்பஓய்வு பெற்ற 170 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் ஊழியா்களுக்... மேலும் பார்க்க

தாய், மகனை தாக்கிய இருவா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே முன்விரோதத்தில் தாய், மகனை தாக்கிய இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மூன்றாம்சேத்தியைச் சோ்ந்த அன்புச்செழியன் மகன் சரண் (20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த அஜித் என... மேலும் பார்க்க