செய்திகள் :

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

post image

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அனைத்துவிதமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார். இதன்மூலம், கிட்டத்தட்ட அவரின் 25 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய அணிக்காக 22 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் (76 விக்கெட்டுகள்), 36 ஒருநாள் போட்டிகள்(64 விக்கெட்டுகள்) மற்றும் 10 டி20 போட்டிகளில் (16 விக்கெட்டுகள்) அமித் மிஸ்ரா விளையாடியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் முத்தரப்பு தொடரில் அறிமுகமான அமித் மிஸ்ரா, அதன்பின்னர்., 2008 ஆம் ஆண்டில் பஞ்சாபின் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.

அதன் தொடர்ச்சியாக, 2013 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னாள் வீரர் ஜகவல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார்.

2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடிய மிஸ்ரா, 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருந்த அமித் மிஸ்ரா, இந்திய அணிக்காக கடைசியாக 2017 ஆம் ஆண்டு விளையாடியிருந்தார்.

ஹரியாணாவைச் சேர்ந்தவரான மிஸ்ரா, ஐபிஎல் போட்டிகளில் தில்லி(2008), பஞ்சாப்(2011), ஹைதராபாத்(2013), லக்னௌ(2024) ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 162 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 174 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், இவர் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல்லில் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணிக்காக விளையாடி ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

Veteran Leg-Spinner Amit Mishra Announces Retirement From All Forms Of Cricket

இதையும் படிக்க : கமிந்து மெண்டிஸ் அதிரடி; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை!

துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!

துலீப் கோப்பையின் அரையிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல்நாள் முடிவில் அவரது வெஸ்ட் ஜோன் (மேற்கு மண்டல) அணி 363 ரன்கள் குவித்தது. பெங்களூரில் நடைபெற்றுவரும் துலீப் கோ... மேலும் பார்க்க

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட... மேலும் பார்க்க

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து தினேஷ் கார்த்திக் விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் எனக் கூறியுள்ளார். ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீர... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை விசாரித்து வருகிறது. 1எக்ஸ் பெட்டிங் எனும் சட்ட விரோதமான சூதாட்ட செயலியில் தொடர்பு இருப்பதாக இந்த விசாரணை நடைபெறுகிறது. அமலாக்கத்த... மேலும் பார்க்க

பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரிவிகிதத்தின் எதிரொலியால் ஐபிஎல் டிக்கெட்டின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நேற்று(செப். 3) நடைபெற்ற ... மேலும் பார்க்க