இரண்டு பாகமாக உருவாகும் கார்த்தி - 29?
நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 29-வது படம் இரண்டு பாகங்களாக தயாராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தின் வெளியீடு தாமதமாகி வருகிறது. தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, டாணாக்காரன் படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: சச்சின் மறுவெளியீட்டு போஸ்டர்!
இப்படத்தின் கதை 1960-ல் ராமேஸ்வரத்திலிருந்த கேங்ஸ்டர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையைத் தொட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இது உருவாகும் எனத் தெரிகிறது. நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கார்த்தி - 29 படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.