செய்திகள் :

இரவில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க |இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 2-ம் இடம்!

The Chennai Meteorological Department has announced there is a possibility of rain in 18 districts in Tamil Nadu for the next 3 hours.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நெஞ்சுவலி!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவ... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து மக்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில்,... மேலும் பார்க்க

முதல்வர் எப்போது வீடு திரும்புவார்? - மு.க. அழகிரி பேட்டி

முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமாக இருக்கிறார், அடுத்த 2 அல்லது 3 நாள்களில் வீடு திரும்புவார் என்று அவரது சகோதரர் மு.க. அழகிரி கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லே... மேலும் பார்க்க

தருமபுரி அருகே வீட்டின் மீது மோதிய அரசுப் பேருந்து: சிறுமி பலி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் உழவன்கொட்டாய் பகுதியில், சாலையோரம் இருந்த வீட்டின் மீது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுமி பலியானார்.தருமபுரியின் கிராமப்... மேலும் பார்க்க

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியுள்ளது.... மேலும் பார்க்க